கிளிக்... கிளிக்... கிளிக்...

Thursday, March 08, 2012

மருந்தில்லா மருத்துவம் - செவி வழி தொடு சிகச்சை

முதன் முதலாக எனக்கு பதிவுலகில் விருது அளித்து கெளரவப்படுத்திய 
லக்‌ஷ்மிமாவுக்கு என் நன்றியை காணிக்கையாக்கி இப்பதிவினையும்
அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்......


நீண்ட இடைவெளிக்குப்பின் எழுத வந்திருக்கிறேன்.
சும்மா வரல வெயிட்டா ஒரு விஷயத்தோட வந்திருக்கிறேன்.


அதிசயம் ஆனா அதிசயமில்லை...
ஆச்சர்யம் ஆனா ஆச்சர்யமில்லை...
என்ன குழப்புறேன்னு பாக்குறீங்களா...அதான் இல்லை


கண்டிப்பாக நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையை,
நாகரீக கலாசார சீர்கேட்டால் நாம் மறந்த பழந்தமிழர் பழக்க வழக்கத்தை,
அதனால் நாம் இழந்த இழப்பை உலகுக்க்கு உணர்த்த வந்திருக்கிறேன்....
என் மூலமாக அல்ல... இன்னொருவர் மூலமாக....


இது ஒரு விளம்பரப் பதிவு அல்ல...


இது ஒரு விழிப்புணர்வு பதிவு....


நான் உணர்ந்த நல்ல விஷயத்தை நாலு பேருக்கு பகிர்வதில் குற்றமில்லை என்கிற நோக்கத்தில் உருவான பதிவு.....


நான் சொல்லப்போறவிஷயம் நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம்..


தெரியாதவங்க இனி தெரிஞ்சுக்கறதுக்காகவும் இந்த பதிவு...


சமிபத்தில் ஒரு DVD பார்க்கும் வாய்ப்பு என் அலுவலகம் மூலமாக
எனக்கு கிடைத்து. நீங்க நினைக்கிறமாதிரி அந்த DVD சினிமா படமில்லிங்க...அது செவி வழி தொடு சிகச்சை என்கிற ANATOMIC THERAPY
சம்மந்தப்பட்ட ஒரு சிகச்சை சொற்பொழிவு DVD.


ஒரு சாதாரண தமிழனின் 6 மணிநேர சொற்பொழிவு
அந்த 6 மணி நேரம்... 6 நிமிடம் போல் போனது...காரணம்...அந்தளவிற்கு தெளிவானதொரு விளக்கம்...சொல்ல வந்த கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்த விதம்....அருமையிலும் அருமை....


உலக மருத்துவம் முற்றிலும் தவறு...
உலக மருத்துவம் நம்மை முற்றிலும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது...
என்கின்ற அவருடைய கருத்தை மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் நான் மனதார  ஏற்றுக்கொள்கிறேன்....


கோட்டு சூட்டு போட்ட வெள்ளைக்காரன் டஸ்புஸ்னு இங்கிலீஸில எதையாச்சும் கோக்குமாக்கா சொன்னா உடனே ஏத்துக்கிற இந்த உலகம்
சாதாரண பேண்ட் சட்டை போட்ட இந்த ஹீலர் பாஸ்கர் என்கிற தமிழன் சொல்கிற கருத்தை , உண்மையை ஏற்றுக்கொள்ளாதா என்ன??


அவர் யாரையும் தொடமாட்டார்...எந்த மருந்தையும் தரமாட்டார்...ஆனால் நோய் குணமாகும்...


எப்படின்னா அந்த 6 மணிநேர DVD ஐ பார்க்கிற எந்த நோயாளியும் அதன்படி நடந்தால் குறைந்து 48 மணிநேரத்திலிருந்து அவருடைய நோய் குணமாக ஆரம்பிக்கும்...
உதாரணமா சர்க்கரை நோயாளி DVD பார்த்து முடித்த அடுத்த வினாடி இனிப்பு சாப்பிடலாம்....


சர்க்கரை நோய்க்கு இனிப்பு சாப்பிடக்கூடாது என்கிற உலக மருத்துவம்
முற்றிலும் தவறு....சர்க்கரை நோய்க்கு மருந்தே இனிப்புதாங்க.... நம் அனைவராலும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய இதற்கான விளக்கம் அந்த DVD இல் இருக்கிறது...
அதே மாதிரி
அனைத்து நோயாளிகளும் இந்த DVD ஐ பார்த்த அடுத்த வினாடி உணவில உப்பு, புளி, காரம், குறைக்க தேவையில்லை, பத்தியம் இருக்க தேவையில்லை, வாக்கிங் போக தேவை இல்லை.
சர்க்கரை மற்றும் அனைத்து நோயாளிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்கு பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுவதும் தாராளாமாக சாப்பிடலாம்.
DVD கிடைக்குமிடம் அவருடைய (ஹீலர் பாஸ்கர் )இணையதளத்தில் இருக்கிறது .. வீடியோ இனணப்பிணையும் கிழே கொடுத்துள்ளேன்..


நேரத்தை வீணாக்காமல் உடனே பாருங்கள்...பயன்பெறுங்கள்...
அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்....


உண்மையாலும் நல்ல விஷயங்க....



கிழேயுள்ள இணைப்பில் உள்ள வீடியோக்களை தயவு செய்து வரிசையாக பார்க்கவும்...அப்பத்தான் விளங்கும்...என்ன புரியுதா...




புவி Part X
நீர் Part XI
தூக்கம் Part XIV
உருளிப்பட்டை தூம்பு கதை Part XV

சந்திப்போம் மீண்டும்......அடுத்த பதிவுல







Sunday, January 08, 2012

தானே புயல்...காற்று சுனாமி....

சென்ற பதிவில் தானே புயல் தமிழகத்தை தாக்க வந்துகொண்டிருப்பதை


குறிப்பிட்டிருந்தேன்...




எங்கள் கடலூர் இருளில் இந்த புத்தாண்டை ஆரம்பிக்க 


வழிவகை செய்த தானே புயல்...


எப்போதும் போல வரும் சாதாரண புயல்தானே 

என்று நினைத்திருந்தேன்....

135கி.மி.....வேகத்தில்....புயல் அடித்த அக்கணம்.....

ஊ....ஊ....ஊ....என ஒரே சத்தம்.....

டம டம என்று காற்றில் அடித்த கூரைகள் பிய்த்துக் கொண்டு போனது...

வானத்தை நோக்கியே பார்த்துக்கொண்டிருந்த 

எங்கள் கடலூர் மரங்களை தானே புயல் 

தரையை பார்க்க வைத்து சாதனை புரிந்த்து.....

கடலூர் கம்மியம் பேட்டையில் உள்ள புனித வளனார் தேவாலயத்தின்

கோபுரத்தைத் தினமும் பள்ளி செல்லும் போது தவறாமல் பார்ப்பேன்...

என்னளவில் 30 வருடங்களாக நான் பார்த்த அந்த இமாலய கோபுரத்தை

இன்று தானே புயல் தரையோடு சாய்த்துவிட்டது....

எண்ணற்ற முந்திரி மரங்கள்..... 

பலா மரங்கள்.....பரலோகம் போய்விட்டன...

இந்நிலையில் எந்த புண்ணியவானோ பூகம்பம் வரப்போகிறது என்ற

வதந்தியை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பரப்பிவிட்டான்...

காட்டுத்தீ போல பரவிய இந்த வதந்தியினால் இரவு 12 மணிக்கு 

தத்தம் குழந்தைகளோடு வீட்டைவிட்டு வெளிவந்த மக்கள் மறுநாள்

காலை 7 மணிக்குத்தான் வீட்டிற்குள் சென்றார்கள்...  

இது ஒரு வதந்தி என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும்

ஃப்ளாஷ் நியூஸ் போட்டு என்ன ப்ரயோஜனம்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது 

போய் சேர வாய்ப்பில்லாமல் போய்விட்டதே...

காரணம் மின்சாரம் இல்லை...

மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத 

காரணத்தால்....நோயாளிகள்...முக்கியமாக 

கர்ப்பினிப் பெண்கள் பட்ட அவஸ்தையினை எழுதுவது 

என்பது என்னால் இயலாது.... 

குடிக்க குடிநீர்....புழங்குவதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை......

சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி

 இரவில் கடைசியாக எரிந்த என்வீட்டின் மின்விளக்கு 

இன்றளவும் ஒளிரவில்லை....செல்போன் சார்ஜ் போட கூட இயலாததால் 

யாரையும் அவசரத்துக்கு தொடர்பு கொள்ள கூட முடியவில்லை....   

தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் தினமும் 

கடலூர் தலைப்பு செய்தியாகிவிட்டது...

ஆதிகாலம் இரவில் எப்படி இருந்திருக்கும் என்பதை

தானே புயல் எங்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது...

எதிர்பாராமல் வந்த இயற்கை சீற்றமான இந்த

தானே புயலின் இரண்டு மணிநேர கோரதாண்டவத்தினால் ஏற்பட்ட 

இழப்பில இருந்து கடலூர் மீள இன்னும் 

எத்தனை ஆண்டுகள் ஆகும்??????????