கிளிக்... கிளிக்... கிளிக்...

Thursday, December 29, 2011

2012 - இன்னும் இரண்டு நாட்கள் தான் - 2011

2011

பலருக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருந்திருக்கிறது....

பலருக்கு மறக்க முடியாத ஆண்டாக இருந்திருக்கிறது....

இந்தியா உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வென்றது..

ஜப்பானில் சுனாமி வந்தது.....,

பின்லேடனின் மேலுலக பயணம் செய்தது,

சாய்பாபா மரணம்..,

அன்னா ஹாசாரே என்ற ஹீரோவின் அறிமுகம்..,

சூப்பர் ஸ்டார் உடல்நலக்குறைவு...,

சேவாக் இரட்டைசதம்...,

ஐஸ்வர்யா ராய் க்கு பெண் குழந்தை..,

கடாபி கவிழ்ந்தது..,

ஸ்பெக்ட்ரம் ஊழல் கைதுகள்,


எதிர்க்கட்சி தலைவராக கேப்டன்,

24 ஆவது முதலமைச்சராக அம்மா,


கொலைவெறி டி ஹிட்,

முல்லைப்பெரியாறு, கூடங்கூளம் விவகாரங்கள்

என பலவாறு தன்னை இவ்வுலகில் பதிவு செய்த இந்த


2011 வருடம் முடிகிற தருவாயில் 


இதோ தானே புயல் தமிழகத்தை தாக்க 150 கிமி வேகத்துடன் வருகிறது.....

எவ்வித பெரிய அசம்பாவிதம் இல்லாமல் இந்த 2011 ஆம் ஆண்டு

இனிதாக முடியவும் .....2012  மகிழ்வுடன் பிறக்கவும்....

எல்லாம் வல்ல இறைவனைப்பிராத்திக்கிறேன்...

அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....




Tuesday, November 29, 2011

தக்கைகள்....இப்படித்தான் பலர்.....





தக்கைகள் ஒருபொழுதும் அறியாது நீரின் ஆழம்....




ஆம்....இக்கால மனிதர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை மனிதநேயம்....


இன்றைய மனித உயிரினங்கள் எனும் மனிதர்கள், 


மனிதநேயமிக்க மனிதரை பார்ப்பது கூண்டுக்குள் அடைபட்ட அரிய 


விலங்குகளைப் பார்ப்பது போன்ற அதிசய ஆச்சர்ய நிகழ்வாகிவிட்டது...


ஆம் மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்....


இக்காலஓட்டத்தில் அவ்வப்பொழுது........ 


சாலையில் மக்கள் நெருக்கடி மிகுந்த அந்த அவசரநேரத்தில்


வேகமாக வந்த மாக்ஸி வேன் சடாரென்று நிற்கிறது...


வேனுக்கு இடதுபுறமாக வந்த நான் கண்டகாட்சி


வேனுக்கு முன் ஒரு வயதான மூதாட்டி தலையில் ஒரு மூட்டையும்’


இடுப்பில் ஒரு சுமையுடன் சாலையினை கடக்க 


தட்டுதடுமாறி....முயற்சிக்கிறார்...அவர் நிதானமாக சாலையை கடக்கும் 


வரை பொறுமையுடன் காத்திருக்கிறார்....வேன் டிரைவர்......அவருக்கு ஒர்


சல்யூட்....பின்னால் அலறும் வாகனங்களுக்கு புரியவில்லை வேன் 


நின்ற காரணம்..... நானும் வண்டியை நிறுத்திவிட்டு அந்த மூதாட்டி 


சாலையை கடக்கும் வரை காத்திருந்தேன்.... அந்த காத்திருப்பில் பூத்தது


மனதில் ஒர் மட்டற்ற மகிழ்ச்சி....










இரவு நேரத்தில் பேருந்து கிடைக்காமல் அவசரமாக செல்ல வேண்டிய 


காரணத்தால் ஆட்டோவில் பயணித்தபோது


திடிரென்று ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ டிரைவர்...


எதிரில் ஒரு விபத்து நடந்திருக்கிறது...மோட்டார் வண்டியில் சென்ற ஒரு 


குடும்பத்தலைவர் கிழே விழுந்து எழுந்திருக்கமுடியாமல் மயக்க 


நிலையில் கிடக்கிறார்... அருகில் சென்று பார்த்துவிட்டு அவரை 


மெதுவாக தூக்கி ஆட்டோவுக்கு கொண்டு வந்து என்னிடம் 


”நீங்கள் அவசரமாக செல்ல இருக்கிறீர்கள் என்பது எனக்கு 


தெரியும்...இருந்தாலும் இப்போது இவரை 


மருத்துவமனைக்கு அழைத்து செல்வது எனக்கு முக்கியம்..


அதனால் நீங்கள் வேறோரு ஆட்டோவை பிடித்து செல்லுங்கள்” என்று 


சொன்னார் . நான் அவரிடம் “விபத்தில் அடிப்பட்டிருப்பவர் 


உங்களுக்கு தெரிந்தவரா”  என்று கேட்டேன்.... அதற்கு டிரைவர் 


அடிபட்டவர் யாரென்று தனக்கு தெரியாது....ஆபத்து நேரத்தில் 


தெரிந்தவராய் இருந்தால் மட்டும் தான் உதவ வேண்டுமா என்ன என்று 


கேட்டவாரே ஆட்டோவை கிளப்பி ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார்.....


அவருக்கு ஒரு சல்யூட்.....அன்று 5 கிமி நடந்தே வீட்டுக்கு சென்றதில் 


எனக்கு களைப்பே தெரியவில்லை....


மனதில் அப்படி ஒரு சுகம் அன்று அந்த மனிதனைக் கண்டதில்.....


பேருந்தில் நின்று பயணிக்கும் கர்ப்பினி பெண்ணுக்கு, கைக்குழந்தையை 


சுமந்து நின்று பயணிக்கும் மகளிருக்கு, வயதான முதியவர்களுக்கு 


எழுந்து நின்று இடமளித்து உதவும் அனைத்து பேருள்ளங்களுக்கும் 


ஒரு சல்யூட்...


இப்படி சின்ன சின்ன விஷயத்தில் தான் சுயநலமில்லாத மனிதம்


வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது...நான் கண்ட வரையில்.....


ரொம்ப நாள் கழித்து சந்தித்த நண்பன்


“வாழ்க்கை எப்படிப்போகிறது” என்று கேட்டான்..


நேற்று சரவணபவனில் பெரிய தோசை வேண்டும் என்று


அடம்பிடித்து வாங்கிச்சாப்பிடமுடியாமல் முழித்துக் 


கொண்டிருந்த சிறுமியைப்பற்றிச் சொன்னேன்...


“அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லி சென்று விட்டான்....


என்னிடம் பெரிதாக எதேனும் எதிர்பார்க்கிறார்களா!!??......

Monday, November 21, 2011

ப்ப்ப்போலிஸ்...ப்ப்போலிஸ்...ப்போலிஸ்...

இப்பதிவின் நாயகன் நகைச்சுவைக்காவலனுக்கு நன்றி அட அதாங்க சிரிப்பு போலிஸ்


இப்பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே.....யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதியப்பட்டதல்ல...அப்படி புண்பட்டுச்சின்னா ஓசியில போலிஸிக்கு தோசை போட்டா புண்ணு சரியாயிடுன்னு டெரர் பாண்டி சுவாமிகள் போ(தை)தனைகள் மூலமா அல்லாரும் தெரிஞ்சிக்கலாம்.


பன்னிக்குட்டியோட அல்லக்கை என்ற பெருமை பெற்ற சி.போலிஸ் அண்ணன்
ராக்கெட் ராஜாவைவிட சத்தியமா ரொம்ப ரொம்ப நல்லவராம்....... 



சி.போலிஸோட பதிவ படிச்ச பலபேர் பேக்கு கணக்கா பீச்சில பரதேசியா
திரியறதா நம்ம பன்னிக்குட்டி அண்ணன் ரொம்ப பெருமையா பரையரார்...


”டவுசரு...அதுக்காக இந்தப்பதிவுல போலிஸைக் கூட்டிட்டு வந்து இப்படியா கலவரப்படுத்துவ” அப்படின்னு கேக்காதிங்க....


நம்ம போலிஸ் டெரரையே ரொம்ப டெரராக்குன இரகசிய திகில்கதை இப்ப இந்த வினாடிதான் இனணயத்துல வெளியாகியிருக்கிறது....அதனாலதான்...


நள்ளிரவு கடந்த பொழுதில் “ஹோ...ஹோ” வெனக் காற்றும் அலையும் மாறி மாறி சுருதி சேர்த்துக்கொண்டிருந்த மெரினா பீச், உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையை டெரர் பாராக மாற்றி இருந்த நேரம்...


இரவு உறக்கம் வராமல் ஓசியில் ஏதாச்சும் கிடைக்குமா என்று அங்கு வந்ஹ சி.போலிஸிடம் வகையாக சிக்கிக்கொண்டார் டெரர்...


மணலில் சில பீர் பாட்டில்கள் அரைகுறையாக புதைந்திருந்ததைப்பாத்த நமம போலிஸ்...


”என்னா மாப்ளே என்னைய விட்டுட்டு நீ மட்டும் தனியா கச்சேரி ஆரம்பிச்சிட்டியே”


“நான் என்ன பண்றது! உன் டப்பா போனை மாத்துன்னு கரடியாக் கத்தினாலும் கேக்குறியா நீ?...நாட் ரீச்சபிள், பிஸி, சுவிச்ட் ஆஃப்னு என்னன்னவோ வருது...ஆமா நீ கொடுத்த நம்பர் கரக்டானா நம்பர்தானா?...”


“என்னடா ஏதாச்சும் பிரச்சனையா?”


”பின்ன என்ன... நானே பாதி போதையில குத்துமதிப்பா தடவிதடவி உன் நம்பர டயல் பண்ணா பன்னிக்குட்டி பேசறாரு ...நானும் போதையில நீதான்னு நினைச்சிக்கிட்டு எதேதோ உளரிட்டேன்...இப்பதான் பன்னிக்குட்டி இங்க வந்து பாதியே பார்சல் பண்ணிட்டு போயிடுச்சி...இருக்குற பாதியையாச்சும் ஒருகை பாத்துரலாம்னு நினைச்சிட்டிருந்தா பாவி.. நீ வந்துட்டியே? இனி நான் குடிச்சாப்பல தான்... ”


“என்ன பாதி போயிருச்சா! ஆ வட போச்சே!”


“ஏண்டா ஒசின்னா இப்படி அலையுறே!”


“பாண்டி...வாழ்கையில சில வாய்ப்புகள் வரும்.
சில வாய்ப்புகள் வாழ்க்கையே தரும்’இதான் நம்மளோட ஓசிபாலிஸி”


“த்தூ... நாதாரி...ஓசியில வாங்கித்தின்றதுக்கு சொல்ற காரணத்த பாரு”


“வழக்கமா எல்லாரும் உன்னைத்தான் காறித்துப்புவாங்க இப்ப நீ என்னைப் பாத்து துப்புறீயா...கீப் இட் அப்”


“அதுக்கு ஏண்டா என் முதுகில தட்டுறே”


“மத்தவங்க முதுகுக்குப் பின்னால நாம செய்ய வேண்டியதே தட்டிக்கொடுப்பது தான் என் அருமை டெரர் நண்பா”


டெரர் டெரராகி பீர் பாட்டில எடுத்து வாய்ல வைக்கலாம்னு பாத்தா பாட்டில் காலி.....
”டேய் எப்படா இதையெல்லாம் காலிபண்ணே...நாயே....நீ தத்துவமா பேசும்போதே நான் உஷாராயிருக்கனும்.”


ரொம்ப செம டென்ஷனா இருக்கிற டெரரைப்பாத்து...போலிஸ் “நண்பா நான் வாழ்க்கையில எப்ப அதிகமா பூரிப்படைவேன் தெரியுமா”


கர்ர்ர்ர்... “ தெரியாது சொல்லு”


“ம்ம்ம் பூரி மசாலா சாப்பிடும்போதுதான்....
 யாராச்சும் சும்மா வாங்கித்தருவாங்களா...பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”


அன்றையிலிருந்து டெரருக்கு பீரைப் பாத்தா பூரி மாதிரி தெரியுதாம்....பூரியைப்பாத்த பீர் மாதிரி தெரியுதாம்....


வாழ்க ஓ சி. போலிஸ்.....வளர்க...அவர் (ஓசி)தொண்டு...



Monday, October 31, 2011

மரக்கல் மன்னன்...கோகுலத்தில் சூரியன்....

Our sincere thanks to Mr.VENKAT 
for his special best performance in this Post 
and this Post especially dedicated to VKS&VAS
மங்குனி: மன்னா எங்கே அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கீறீர்கள் மன்னா?
ஏமராமன்னன்: போகும்போதே கேள்விகேட்டுவிட்டாயா...
ம்ம்ம்..போகிறகாரியம் கூமுட்டையா போகாம கொய்யா பழமானா சரி.....
மங்குனி: அப்படி என்ன ஒரு அதிமுக்கிய வேலைக்கு செல்கிறீர்கள் மன்னா...
ஏமராமன்னன்:மீண்டும் கேட்கிறாயா...   நீ மங்குனி என்பதை மீண்டும் மீண்டும் நிருபீப்பதில் உனக்கு நிகர் நீயே..நான் குருகுலத்துக்கு போகப்போகிறேன் நம் அண்டைநாட்டு மன்னர் கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கார் அல்லவா அதன் முடிவு இன்று வெளிவரப்போகிறது...அதை தெரிந்து கொள்ள செல்கிறேன் மங்குனி...
மங்குனி: என்ன வெங்கட் முதியோர் கல்வியில் பயில்கிறாரா மன்னா...
ஏமராமன்னன்: இல்லை இலலை அவர் முதலாம் ஆண்டு கல்வியை முடிப்பதற்குள் அது முதியோர்கல்வியாகிவிட்டது மங்குனி....
மங்குனி:ஹா ஹா ஹா....அடித்தளம் ஆழமாக பதித்து விட்டார் போல மன்னா...
ஏமராமன்னன்: என்ன ஏளனம்....இது மட்டும் அவர் காதில் விழுந்தால் உன் டங்குவாரை கிழித்துவிடுவார் ஜாக்கிரதை......
- - - - - -
இடம்: குருகுல கிரவுண்டு

அனைத்து மன்னர்களும் மன்னிகளும் மொத்தப்பல்லும் தெரிய சிரித்துக்கொண்டு சூரியனுக்கே ஏரோப்ளேன் விட்டமாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் கை கொடுத்துக்கொண்டனர்.

கோகுலத்து மன்னர் வெங்கட் மனதுக்குள் ”என்னைப்போலவே ஒன்றாம் வகுப்பில் 30 வருடங்கள் பெயிலான பன்னிக்குட்டி கூட பாஸாகிவிட்டாரே....அட ரெண்டு லட்டு போட்டா அதான் எட்டுன்னு சொல்ற வெளங்காதவன் கூட பாசாயிட்டார் போல...இவரே பாஸாயிட்டா நாம் கூட பாஸ்தான்” என்ற நம்பிக்கையோட ஒட்டப்பட்டிருந்த காகிதத்தை எட்டி எட்டி பார்த்தார் இந்த சூரியமன்னர்...

கோழிமுட்டையில் கல் அடிச்சது போல நொடுக்கென ஆகியது மன்னர் வெங்கட்டுக்கு...
முப்பது வருடங்களாக முதல் வகுப்பில் பெயிலான மன்னர் முப்பத்தியொன்றாவது வருடமும் பெயிலாகி சரித்திரசாதனை படைத்திருந்தார்...
ஆட்டு மந்தைக்கு நடுவே வேட்டைநாயைபோல வீரமோடு வந்தார் மன்னர்....
தான் தேர்வில் தேர்ச்சி அடையாததன் காரணத்தை அவையில் கூடி ஆராய்ச்சி செய்ய ஆணையிட்டார் மன்னர்....
ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தன....

தேர்வு நேரத்தில் படிக்காமல்
1.தென்னைமரமேறி கிணற்றில் குதிப்பது...
2.ரெட்டை நாயை கண்டால் கல்லால் அடிப்பது...
3.ஒத்தக் காலில் நின்னு சைக்கிள் விடுவது....
4.ஏரியில் மீன் பிடித்து குமரிகளிடம் கொடுத்து, பனைமரத்தடியில் பிரியாணி தின்பது...
5.படிப்பது மண்டையில் ஏறவில்லையானால் காலோரம் வந்த பூனையை எட்டி உதைப்பது...
6.கரப்பான் பூச்சியை காலால் மிதிப்பது.....கட்டுவீரியனை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது..
7.சுண்ணாம்பு சுவத்தில் தலையை முட்டிக்கொண்டு விதவிதமாக சிரிப்பது...
8.ஈயை எட்டி உதைக்கிற எருமை மாட்டை வேடிக்கை பார்ப்பது..
9.துருபிடித்த சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு ஊரை சுத்தியது..
10.பூஜ்யத்தில் ஒன்னு போகுமா என்ற கேள்விக்கு வாய்க்குள் பன்னு போகும்போது பூஜ்யத்தில் ஒன்னு போகாதா என்று பதில் கேள்வி சொன்னது

போன்ற டாப்டென் காரணங்களே போட்ட தண்டவாளததில் ரயில் போவதுபோல வருஷமானா மன்னர் வெங்கட்பெயிலாவதற்கான காரணங்கள்....

இதையெல்லாம் விட தலையாய, அதிமுக்கிய முதல் காரணமொன்று என்னவென்றால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அடிக்கடி

தர்ம அடி வாங்கி தர்மாஸ்பத்திரிக்கு செல்வது.......

டிஸ்கி: கல்லைகூட செதுக்கி சிற்பமாக்கிவிடலாம்...ஆனால் இந்த மரக்கல் மன்னனை முதலாம் வகுப்பில் பாஸ் செய்யவைப்பது....ஹா ஹா ஹா விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.......

பகிர் பகிர் லிங்க்: இங்கிலிசு தெரிஞ்சவங்க படிங்க....படால்னு பக்குன்னு ஒரு பகிர் பயங்கர நியுஸ்.....முக்கியமா சமையல் பதிவு போடுபவர்கள்....தெரிந்து கொண்டு எச்சரிக்கையடைய...மைக்ரோவேவ் மக்களை கொல்லுகிறதா......






Tuesday, October 25, 2011

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மின்னஞ்சலில் வந்ததை உங்களனைவருடன் பகிர்வதில் பெருவுகை அடைகிறேன்...



THOUGHTS BEFORE THE DAY - DIWALI

ª      Purchase your crackers from a reliab1e shop to ensure quality and better safety.
ª      Talk to your friends and find out the doctors in station during the Diwali night to contact in event of emergency.
ª      Keep phone nos of the doctor ready in your pocket or archive in your mobile
ª      Buy Soframycine / Silversulphadine /Burnol / or any other suitable ointment for first aid in event of burns along with firecrackers and keep it handy. It will provide lot of help in emergencies.
ª      Purchase Firecrackers suitable to your requirement & avoid buying those, which you feel unsafe.
ª      Let the adults take care of safety and Children play.
ª      Park your car or two wheeler in a safe place. Ensure that you have fuel to rush to the hospital in event of emergency. In many places petrol pumps are shut on the day after the festival
ª      Do not keep firecrackers in the kitchen or near inflammables/ combustibles.
ª      Keep firecrackers beyond easy reach of  children.
ª      Do not keep them on or near a wet place it will spoil your charm
ª      If you still smoke do not smoke near the place where the firecrackers are kept.
ª      In case a person is afraid of crackers, do not force him to play. Also, do not use firecrackers near him.
ª      If you have a pet dog at home do not disturb him. Make a place for him to hide, as dogs are very scared of the sounds and lights. The dog will remain faithful to you
ª      Keep a water bucket handy to put sparklers in or to fight fire.
ª      Younger children must not be allowed to light the firecrackers. Even sparklers can be dangerous if left unsupervised.
ª      Some older children might try to show off by taking unnecessary risks. Be intolerant to such behaviors and talk to him.
ª      The face and the body must be kept away from the firecracker. The tip of the firework must be lighted at an arm's length using fireworks lighter or fuse wick. One must stand back immediately.
ª      All crackers must be set afire only in open areas
ª      Rockets should be put in non- inflammable containers (glass bottles) and directed upwards-
ª      Observe that no one tamper with bomb fuses.
ª      In cases of a heavy wind, flying firecrackers must not be lighted.
ª      Children must not be allowed to make a bonfire of firecrackers-
ª      The burnt remains of firecrackers must not be just thrown around but put in a bucket of water.
ª      Children usually enjoy throwing glowing or burning objects prevent this.
ª      Talk to all on safety before you start playing with crackers
ª      In case earthen lamps and candles are used. Ensure that these are not near inflammable materials like wood. Clothe or paper. Lamps and candles must be put off after the festivities.
ª      Avoid electrical lighting if not sure on the electrical safety
ª      IN ORDER TO REDUCE PLAYTIME WITH FIRE ARRANGE FOR GOOD FOOD, MAKE VERY GOOD LAYOUT. THIS WILL REDUCE RISK.

Dress Code for the day:

May be formal or Casual but
ª      Should wear cotton clothes that are not very loose or flowing.
ª      Silk, polyester and synthetics must be avoided at all costs.
ª      Wear shoes this is safer.
ª      Girls must take extra care of their long dupattas.

First Aid


Ingestion: In case a child has swallowed part of a firecracker. Immediately give two glasses of salted water and induce vomiting. Never give anything by mouth to an unconscious person. Immediately consult Doctor

Burns: Use water on burns. Wrap victim in a blanket and remove to fresh air. If not breathing, begin resuscitation.

Eye contact: Immediately flush eyes with water for at least 15 minutes.

Skin Contact: Remove and isolate contaminated clothing. Flush skin with water for at least 15 minutes.

Contact the doctor immediately during emergency.

WISH U HAPPY, SWEET & SAFE DIWALI

Friday, October 21, 2011

பன்னிக்குட்டியும்... பெருச்சாளியும்...

Our sincere thanks to Mr PANNIKUTTI 
for  his guest appearance 
in this post


இந்த இடுகையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே
யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால்
ஹி..ஹி..ஹி..மருந்து பாட்டில வச்சு தேச்சுக்குங்க ..

ஏமராமன்னன்: எலே மங்குனி...எங்க போயிட்ட? ஆளையே காணோம்!

மங்குனி: என்ன மன்னா.. நான் இங்கதானே இருக்கேன்..

ஏமராமன்னன்: அது இருக்கட்டும்..நம்ம நாட்டுல அல்லாரும் ஒழுங்கா படிக்குறாங்களா மங்குனி.... ஏன் கேக்கறேன்னா நடக்கிறது நம்ம ஆட்சி......நம்ம ஆட்சியில கல்விக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கனும்?...

மங்குனி: ஆமாம் அரசே...நீங்க சொல்றது சரிதான் அரசே அனைவரும் இங்கே நன்றாக படிக்கிறார்கள் அரசே..ஆனால்....

ஏமராமன்னன்: ஆனால்னு என்ன இழுவை வேண்டிக்கிடக்கு மங்குனி?

மங்குனி: நம்ம ஆட்சிக்குட்பட்ட பட்டைஅடிச்சாம் பட்டியில ஒரு பன்னாட மட்டும் ஒழுங்கா படிக்கமாட்டேங்குது......எத படிச்சாலும் மாத்தி மாத்தி படிச்சிக்கிட்டு கண்டமேனிக்கு பதில் எழுதுது...என்ன சொன்னாலும்... யாரு சொன்னாலும் அடங்கமாட்டேங்குது?

ஏமரா மன்னன்: அப்படியா யார் அந்த பன்னாட? 

மங்குனி: அந்தப்பன்னாடைய பத்தி முன்னாடியே சொல்லிட்டேன் மன்னா?

ஏமராமன்னன்: முன்னாடி சொன்னியோ பின்னாடி சொன்னியோ அது இப்ப எனக்கு தேவையில்ல ....அவன் ஆடுன ஆட்டத்துக்கு மனசு திருந்தி மன்னிப்பு கேட்டு ஒழுங்கா இருக்கனும்...நான் சொன்னேன்னு அவன்கிட்ட போய் சொல்லு.. அப்படி இல்லண்ணா பட்டை அடிச்சாம் பட்டியில பட்டைய கெளப்பிடுவோம்னு சொல்லு....

மங்குனி: பாதிபேர் அந்த ஊர்ல இருந்து பட்டைய கெளப்பிட்டாங்க மன்னா இருந்தாலும் அவன் அடங்குறமாதிரி தெரியல மன்னா?... அந்த மொக்கைப்பயலுக்கு எதப்பாத்தாலும் மொக்கையா தெரியுதாம் மன்னா?


ஏமரா மன்னன்: என்ன சொல்லவர மங்குனி....அப்ப அவன அடக்கி திருத்த யாராலும் முடியாதுன்னு சொல்றே...அப்படித்தானே...


மங்குனி: ஆமாம் மன்னா!  யாராலும் அவன் அடக்க முடியாது மன்னா! ஆனா ஒரே ஒருத்தரால மட்டும் அது முடியும் மன்னா?...

ஏமராமன்னன்: அப்படியா யாரவரு..அவரப்பத்தி டீடெய்லு சொல்லு ..?’

மங்குனி: அவரு பல வேலை எல்லாம் பாத்தவரு மன்னா.... பல்லாவரத்துல கல்லு ஒடைச்சிருக்காரு,பெட்ரமாக்ஸ் லைட்ட வாடகைக்கு விட்டுருக்காரு,பத்து பாத்திரத்துக்கு ஈயம்பூசிருக்காரு,துணிகிழிஞ்சது கிழியாதத தச்சிருக்காரு....

ஏமராமன்னன்: எலே மங்குனி நிறுத்து... என்ன ரொம்ப ஓவரா பில்டப் பண்ற? இப்ப என்ன பண்றாருன்னு சொல்லு?

மங்குனி: சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கான்னு தேடிக்கிட்டு இருக்காரு மன்னா..

ஏமராமன்னன்: யார்ரா அப்படிப்பட்ட அந்த புண்ணியவான்?

மங்குனி: அவரு வேற யாருமில்லிங்கோ அவருதாங்க பன்னிக்குட்டிங்கோ?

ஏமராமன்னன்: இவரு போய் அந்த மங்குஸ் மண்டையன எப்படி மங்குனி அடக்குவாரு?...

மங்குனி: இவரு ஒருத்தராலதான் அந்த பன்னாடைய அக்கு அக்கா பிக்கமுடியும் மன்னா?

ஏமராமன்னன்: அப்படியா உடனே அந்த பன்னிக்குட்டிய பட்டை அடிச்சாம் பட்டிக்கு பேக் பண்ணு...இது இந்த மன்னனோட ஆணை!...ஆணை!..ஆணை!
(அரசவை கலைகிறது)
- - - - - - - - - 
இடம்: பட்டை அடிச்சாம் பட்டி- மலை உச்சி

கீரிச்.....என்ற சத்தத்தோட வேகமா பறந்து வந்த கட்டவண்டி 10 சுத்து சுத்தி படால்னு ப்ரேக்போட்டு நிக்குது....ஒரே புழுதியா பறக்குது... அப்படியே லோஆங்கிள்ல கேமராவ தரையிலிருந்து மேல தூக்குனா கட்ட வண்டியில இருந்து இரண்டு கால் தரையில பதியுது....
யார்ரான்னு க்ளோசப்ல மூஞ்சிய பாத்தா...அட நம்ம பன்னிக்குட்டி!?..
பேக்ரவுண்ட் மியுசிக் ஸ்டார்ட்: குஞ்சாங்...குஞ்சாங்..குஞ்சாங்.....
(மியுசிக் சுட்ட இடம்:பன்னிக்குட்டியோட ப்ரொஃபைல்)
(பன்னிக்குட்டிண்ணா நீங்க சொன்னமாதிரியே உங்களூக்கு 
சூப்பரா ஒரு இண்ட்ரொ கொடுத்திட்டேன் பாத்திங்களா)

”அடங்கொக்கமக்கா யார்ரா அந்த பன்னாடநாயி....நான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்ஒழுங்கா வெளிய வந்துடு நாயே...
வரலன்னா நானே பாக்காத பன்னிக்குட்டியே நீ பாக்க வேண்டி இருக்கும்...அடிகொடுக்குற அனிமல்லுக்கு கண்ணூ முன்னாடி இருக்கும்
அடிவாங்குற அனிமலுக்கு கண்ணு சைடுல இருக்கும்..  ஒழுங்கா வந்துடு இல்லைன்ன்னா உன்னோட கண்ணு இப்ப எடம் மாறி போயிடும்.... மரியாதையா வந்துடு நாயே.”

“அண்ணே அண்ணே த்தோ வந்துட்டேன் அண்ணே.....பஞ்ச் டயலாக்குல மக்கள சிந்திக்க வச்சி சயின்ஸ் தெரிஞ்சிக்க வக்கிறீங்களே அண்ணே ”

“அட பனங்கொட்டைத்தலையா நீதானா அது! என்றா ஒன் பேரு”

“அதுவான்னே என்பேரு பெருச்சாளிண்ணே”

“என்னது பெருச்சாளியா...இது இல்லையே உன்பேரு... வேற பேராச்சே உன்னோடது!”

“ஆமாண்ணே அந்தப்பேரு போனமாசம்ண்ணே....அந்த பேருக்கு வாஸ்து சரியில்லண்ணே, அதனால இந்த மாசம் என் பேரு பெருச்சாளிண்ணே!”

“அட பொறம்போக்கு நாயே... மாசம் மாசம் பேர மாத்திக்கிட்டி அலைவியா!....மகா ஜனங்களே இந்த பன்னாட நாயி பேரமாத்தி மாத்தி வச்சிக்கிட்டு பல ஊரு அலையிது...பாத்து பக்குவமா இருந்துக்குங்க...சொல்லிப்புட்டேன் ஜாக்கிரத...”

“ஆமாண்ணே மனுசனா பொறந்தா பத்து பேராவது மாத்தி மாத்தி வச்சிக்கிட்டு அலையினும்”


”என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!”
”அண்ணே கோச்சிக்காதிங்கண்ணே...நாம ஒரு விளையாட்டு விளையாடலாமாண்ணே”
“என்னது நான் உன்கூட விளையாடனுமா.. அப்படி என்னடா நாயே விளையாட்டு?”
“அதுவாண்ணே எனக்கு நிறைய விளையாட்டு தெரியும்ண்ணே, 
 கப்ளீங்,சப்ளீங், சூப்ளீங்... ”
“நிறுத்துடா நாயே...  இந்த வயசுல நீ விளையாடற விளையாட்டாடா இது.... ஆமா நேத்திக்கு இஸ்கூலுக்கு வராமே எங்கடா நாயே போனே?”
“ஓ அதுவாண்ணே.... நேத்திக்கு நம்ம ஊரு கொட்டாயில கிளுகிளுப்பான காட்சிகள் நிறைந்த படம்னு ஒரு படம் போட்டிருந்தாங்கண்ணே....ஆசை ஆசையாய் அலைஞ்சிட்டு போய் பாத்தா படம் ஆரம்பச்சதிலிருந்து முடியர வரைக்கும் பெட்ல ஒருத்தன் உக்காந்துட்டு கிலுகிலுப்பைய வச்சி ஆட்டிகிட்டு இருக்காண்ணே...ஹி..ஹி..ஹி”
”அட பன்னாடைக்குப் பொறந்த பன்னாட நாயே....பலானபடம்னா 
இப்படி நாக்கைதூக்கிக்கிட்டு அலைஞ்சிட்டு ஓடுறீயே.... மனுசப் பரம்பரையாடா நீ”

“அண்ணே என்னை நீங்க எப்படி வேணுமானாலும் திட்டுகிடுங்க....ஆனா என் பரம்பரைய மட்டும் திட்டாதிங்கண்ணே....எனக்கு கெட்டகோவம் வரும்ணே....”
”அப்படி என்னடா நாயே பெரிய பில்கேட்ஸ் பரம்பரை உன்னோடது”
“அதுக்கும் மேலேண்ணே....நான் கவரிமான் ராஜா பரம்பரையில வந்தவண்ணே”
“என்னா பரம்பரை அது... இன்னொருக்கா சொல்லு”
கவரிமான் ராஜா பரம்பரை
”மகா ஜனங்களே கேட்டிங்களா...இனிமே நடக்கப்போற நல்ல காரியத்துக்கு நான் பொறுப்பில்ல ஜனங்களே....ஏய் பெருச்சாளி நாயே....நீ இங்க இருக்க வேண்டியே ஆளே இல்ல...நீ இருக்கவேண்டிய இடம்...”
சொல்லிக்கிட்டே பெருச்சாளி பெட்டக்ஸ்லியே ஒரே ஒதை.....

பெருச்சாளி மலைஊச்சியிலிருந்து கிழே விழ 
கேமரா சுத்தி சுத்தி மேலே வர....
பன்னிக்குட்டி பெருமிதத்தோடு “இத்தோட இந்த பிரச்சனை
 முடிஞ்சிடுச்சி டோய்...” அப்படின்னுட்டு கெளம்பி போக...

அட நாம எப்படி வணக்கம் போடறது.....த்தோ.. இப்படித்தான்......

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ 
அது நாளை மற்றவருடைதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே வாழ்வின்  நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

ஆகவே
கடமையை செய் பலனை எதிர்பாராதே!

- கீதாசாரம்










Monday, October 17, 2011

தமிழ்மணம் தாமாகவே தமிழ்பதிவர்களை நீக்கும்... அது எப்படி?



தமிழன் என்று சொல்லடா..... தலை நிமிர்ந்து நில்லடா....
என்னுடைய இந்தப்பதிவு கொந்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்:

மங்குனி: மன்னா.....மன்னா.....

ஏமரா மன்னன்: என்ன மந்திரியாரே...

மங்குனி: நெடுங்காலமாக நம் அரசவையில் நாம் காமெடி பண்ணி 
விளையாட ஒர் ஆள் இல்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தோம் அல்லவா...அந்த காலியிடத்தினை நிரப்புவதற்கு சரியான ஒரு சின்னப்பையன் சிக்கிவிட்டான்...வீட்டில் அவன் ஒழுங்காக போகோ டீவியையே எப்போதும் போல பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம்...அவனுடைய போறாதகாலம்..
நானும் ஒரு ரவுடிதான்..என்றபடியே... நம்மிடையே தாமாகவே வந்து 
சிக்கிவிட்டான்....


ஏமரா மன்னன்: அப்படியா...மிக்க மகிழ்ச்சி...யாரந்த சிறுவன்?..

மங்குனி: அவனுக்கு பேர் இல்லை மன்னா.....


ஏமரா மன்னன்: ஐயகோ..என்ன.....என் அரசாட்சியில்..  பெயரே வைக்கப்படதா ஒருவனா...

மங்குனி:ஆம் மன்னா பாவம் அவனுக்கு பெயர் வைப்பதற்கு கூட ஆள் இல்லையாம்....

ஏமரா மன்னன்: சரி நாமே அவனுக்கு பெயர் வைத்துவிடுவோம் அழைத்துவாருங்கள் அந்த சிறுவனை....

மங்குனி: மன்னா நாம் கூப்பிடவேண்டிய அவசியமே இல்லை தாமாகவே வந்துவிடுவான்...பாருங்களேன்....


பணியாள்: மன்னா தங்களுடைய இந்தப்பதிவினைப்பார்த்து ஒரு சிறுவன் தங்களைக்காண வந்துள்ளான் மன்னா!...

மங்குனி: மன்னா நான் சொல்லிவாய் மூடவில்லை அதற்குள்ளாகவே வந்துவிட்டான்....


ஏமரா மன்னன்: வெரி இண்ட்ரஸ்டிங்க்....வரச்சொல் அவனை.....

சிறுவன்: மன்னா காப்பாற்றுங்கள் மன்னா...


ஏமரா மன்னன்: வா சிறுவா வா...ஆமாம் உனக்கு பெயரே இல்லையாமே..ஏன் சிறுவா...ஏன்?

சிறுவன்: ஏன் இல்லை...எனக்கும் பெயர் இருக்கிறது...ஆனால் வெளியில் சொல்லமுடியாது....மன்னா


ஏமராமன்னன்: வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு அப்படி என்னடா ஒரு அவப்பெயர் உன்னுடையது.. சொல் பார்க்கலாம்... நானும் தெரிந்து கொள்கிறேன்...

சிறுவன்: வேண்டாம் மன்னா... நான் சொல்லமாட்டேன்...சொன்னால் எனக்கு ஆபத்து...நீங்களே ஏதாவது ஒரு பெயரை வைத்து என்னை கூப்பிடுங்கள் மன்னா...?

மங்குனி: மன்னா...பெயரே இல்லாத இவன் வலைப்பதிவர்களுக்கு பெயிரிலியாகத்தான் இதுநாள் வரை தெரியவந்துள்ளான்....

ஏமராமன்னன்: ஹா ஹா ஹா...அப்படியா இனி இந்தச்சிறுவனை பெயரிலி என்றே நாமும் அழைப்போம்.....


பெயரிலி: ஹையா ஜாலி ஜாலி....நன்றி மன்னா...நன்றி...

ஏமராமன்னன்: சரி உன்னைப்பற்றி நீயே சுருக்கமாக சொல் பார்க்கலாம்...

பெயரிலி: மன்னா வீட்டில் போகோ டிவி...கார்ட்டுன் டிவி...இதுபோன்ற டிவி சானல்களைப் பார்ப்பது என் முக்கிய தொழில்....பொழுது போக்கிற்காக என் தமிழ் மணத்தில் பதிவிடும் வலைப்பதிவர்களை கலாய்ப்பேன்....அதனால் அனைவரிடமும் செம அடி வாங்கி ரொம்ப கலைத்துவிட்டேன்....எங்கு போனாலும் அடிக்கிறார்கள் மன்னா...மூத்திர சந்திலும் வைத்து அடிக்கிறார்கள்...முட்டுசந்திலும் வைத்தும் அடிக்கிறார்கள்....இதுகூடபரவாயில்லை...மன்னா...
பொறுத்துக்கொள்வேன்..
ஆனால் கக்குஸ் போகும்போது கூட கன்னாபின்னாவென்று அடிக்கிறார்கள்....மன்னா...ஒன்றிரண்டுபேர் அடித்தால் பரவாயில்லை....பிரியாணி, சரக்கு எல்லாம் வாங்கிக்கொடுத்து ஆட்களை வரவழைத்து வந்து அடிக்கிறார்கள்....
நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிப்பது....அடிக்கும்போது
ஒருத்தன் சொன்னான்...டேய் இவன் நல்லவன்லேயே ரொம்ப முக்கியமான மோசமான நல்லவன்னு சொன்னான்...இப்படி சொல்லிசொல்லியே
வாய்மேலேயே அடிச்சாங்க... அடிதாங்கமுடியாம தான் அங்கிருந்து தப்பி தங்களிடம் தஞ்சம் அடைய வந்துள்ளேன்....

ஏமரா மன்னன்: ம்ம் உன்கதையை நானும் அறிவேன்...உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.....


மங்குனி: சிக்கிட்டியே சின்னப்பையா சிக்கிட்டியே....

பெயரிலி: மன்னா என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணமாட்டிங்களே..


மங்குனி: ஆஹா....பையா இனிமே காமெடியே உன்னவச்சிதாம்பா...

ஏமராமன்னன்: சரி சின்னப்பையா அதென்ன கையால மருந்து பாட்டில  
தடவிட்டு இருக்க...


பெயரிலி: மன்னா வலிபொறுக்கமுடியாமல் வைத்தியரிடம் போனேன் மன்னா! அவர்தான் இந்த மருந்து பாட்டிலைக்கொடுத்து தடவச்சொன்னார்..அதான் பாட்டில தடவிட்டு இருக்கேன்...

ஏமராமன்னன்: ஓ மங்குனி இவனுக்கு இம்புட்டு அறிவா!... 
ஏதேது அறிவில் உன்னை விட மிஞ்சிவிடுவான் போல....மருந்தை தடவாமல் மருந்து பாட்டிலை தடவுகிறானே இந்த மக்குப் பயல்.....


பெயரிலி: மன்னா... இதுமாதிரியெல்லாம் என்னை கலாய்த்து பதிவெழுதினால் நான் உங்களை தமிழ் மணத்திலிருந்து நீக்கிவிடுவேன்...

ஏமராமன்னன்: ஹா ஹா ஹா...அதுக்குத்தாண்டா ராசா இந்தப்பதிவே.... தலைப்பை பார்க்கவில்லையா நீ......நான் ஏமராமன்னன்டா...அதுவும் தமிழமன்னன் டா....உன்கிட்ட வந்து என்ன நீக்குன்னு கெஞ்சுவேன்னு பாத்தியா....நான் போடுற பதிவுலேயே நீயே வந்து என்னை நீக்கிடு தம்பி...அதுதான் உனக்கு நல்லது...


மங்குனி: மன்னா...இவன் இங்கேயும் வந்து பின்னூட்டம் போட்டு தொல்லை பண்ணுவான் மன்னா...நமக்கு ஆயிரத்தெட்டு அலுவல் இருக்கிறது.....அதனிடையே இவனுக்கு எப்படி பதில் போடுவது..

ஏமராமன்னன்: ஆமாம் மங்குனி..உனக்கு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்..அதாவது போன பதிவில் நீ வீதியில் உலா போகும் போது ஓடிவந்த ஒரு நாய் உன்னைப் பார்த்துக் குரைத்து கடித்தது என்று கூறினாய் அல்லவா...அந்த நாயை நீ மீண்டும் திட்டினாயா...அல்லது பதிலுக்குத்தான் கடித்தாயா...நன்றியுள்ள நாயையே நீ கண்டு கொள்ளவில்லை...பெயரில்லாத இந்த பில்லக்கா பையனுக்கா பதில் எழுதி பெரியமனிதனாக்கப் பார்க்கிறாய்...மங்குனி.......


பெயரிலி: என்ன நாயிடம் ஓப்பிட்டு என்னை கேவலப்படுத்துகிறீர்களா..மன்னா?.

மங்குனி: சே..சே..நீ சின்னப்பையன் என்று மறுபடியும் நிருபித்து விட்டாயே...என் மன்னர் அப்படி சொல்லவில்லை..சிறுவா....நாயுடன் உன்னை ஓப்பிட்டால் அது நன்றியுள்ள நாயை இழிவுபடுத்துவது போன்றதாகும்...அந்த தவறை என் மன்னர் ஒருபோதும் செய்யமாட்டார்....


பெயரிலி: மன்னா உங்களை ஆங்கிலத்திலேயே திட்டுவேன் மன்னா ஜாக்கிரதை....

ஏமரா மன்னன்: நீ தமிழ்ல திட்டினாலே நான் கண்டுக்கமாட்டேன்..இதில நீ ஆங்கிலத்த வேற உபயோகிக்கப் போகிறாயா...மதிகெட்ட மடையா மடையா..உனக்கு வேற வேலையே இல்லையா... நீ அந்த வேலைக்கெல்லாம் லாயக்கு ஆக மாட்டப்பா....என்ன புரியுதா.. போப்பா போ..வீட்டுக்கு போய்...போகோ டிவி பார்....இல்லை வேற ஏதாச்சும் பார்...இங்க வராதே என்ன...
இனி என் தமிழ்பதிவர்கள் உன் குரலுக்கு செவி சாய்க்க மாட்டார்கள்....
அவர்கள் உன்னைப்போல வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல....ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்க..... உன்ன வச்சிதான் இனி எல்லா காமெடியும்.....நீ சர்தார் ஜோக்ஸ் படிச்சிருப்ப...விஜய் ஜோக்ஸ் படிச்சிருப்ப....ஆனா பெயரிலி ஜோக்ஸ் படிச்சதில்லியே....இனிமே படிப்ப....வலைப்பதிவர்களே.. இனி உங்களுக்கு இது தான் வேலை...

இனி இந்த அரசவையின் காமெடி பீஸுக்கு பேரே பெயரிலிதான்...


நீண்ட நாள் தேடுதல் இந்தப் பெயர்......சிக்கிவிட்டது.....


காமெடி ஆட்டம் இனி அரசவையில் களை கட்டும்...................


நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த 
நிலைகெட்ட மாந்தரை நினைக்கும் போது..


ஏ மாற்றமே....மாறாத நீயே மாறிவிடுவாய்.. 
மாறாத இந்த மடையனை மாற்ற முயலும்போது....














Wednesday, October 12, 2011

நடு நிசி நாய்கள்

Publish Post

இராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட.......ஏமரா மன்னர் பராக் பராக்

வணக்கம் மன்னா

ம்ம் வணக்கம் மங்குனியாரே

“ம் அப்புறம் வேறன்ன செய்தி மன்னா?

ஏதேது இங்கு நான் மன்ன்னா இல்லை நீர் மன்னனா?

ம்ம்க்கும் இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை....என்றெண்ணியபடியே

“மன்னியுங்கள் மன்னா எனக்கு ஒரு சந்தேகம் மன்னா?

“சொல் மங்குனி என்ன சந்தேகம் உனக்கு?

இல்லை மன்னா... வந்து.. இன்றைய அரசியல் நிகழ்வுகள் சரித்திர பாடமானால் எப்படி இருக்கும் மன்னா?

அசோகர் குளம் வெட்டினார்....அக்பர் கிணறு வெட்டினார்....

என்பதற்கு பதிலாக அந்த தலைவர் அவரை வெட்டினார்....இந்த தலைவர் இவரை வெட்டினார்...அவர் இவ்வளவு கோடி ஊழல் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்...இவர் அவரை மிஞ்சும் அளவுக்கு ஊழலில் கின்னஸ் சாதனை செய்து நாட்டிற்கு நல்லது செய்தார்.... என்றல்லவா படிப்பார்கள்...

“ஆம் மன்னா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...ம்ம் அப்புறம்

“மங்குனி நேற்று இரவு ஒன்பது மணிக்கு முக்கியவீதியில் இருசக்கர வாகனத்தில் நகர் வலம் சென்று கொண்டிருக்கும் போது...

இடைமறித்து மங்குனிஇரவில் அதுவும் இருசக்கரவாகனத்தில் உங்களுக்கு அப்படி என்ன நகர்வலம் வேண்டிக்கிடக்கு வெட்டிமன்னா?

“ இல்லை மங்குனியாரே வெட்டியாக பொழுது போக்குவதால் உடல் பருத்துவிட்டதல்லவா அதனால் உடல் எடை குறைய இருசக்கர வாகனத்தில் வாக்கிங் சென்றேன் மங்குனி...இப்போது விசயம் அதுவல்ல மங்குனி..

வேறென்ன மன்னா?

“நகர்வலத்தின்போது எதிரில் சிறிது தொலைவில் ஒரு இருசக்கரவாகனத்தில் மூன்று மானிடர்கள் மிக வேகமாக பயணித்து வந்தார்கள்?

என்ன ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று மானிடர்களா...மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல் இது மன்னா...அப்புறம் என்ன நடந்தது மன்னா?

“மிக வேகமாக அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது திடிரென்று ஒரு நாய் வீதியின் குறுக்காக பாய்ந்து வந்துவிட்டது.....நாயின் மீது மோதிய வேகத்தில் அப்படியே அந்த வண்டி கிழே சாய்ந்து கீரிச் என வீதியில் ஐந்தாறு முறை சுழன்றபடியே ஒரு ஓரத்தில் வந்து விழுந்தது....நல்ல வேளை வாகனத்தில் வந்த மூவருக்கும் பலமாக அடிபடவில்லை....சிறிய சிராய்ப்புகள்தான்...ஆனால் வாகனத்தின் அடியில் சிக்கியிருந்த அந்த நாய் அலறமுடியால் அலறிக்கொண்டிருந்தது.

ஒடிவந்து வண்டியை அவர்கள் தூக்கமுற்படும் போது பார்த்தால் நாயின் ஒரு கால்

வாகனத்தில் மாட்டிக் கொண்டிருந்தது. ஒருவழியாக முயற்சி செய்து வாகனத்தை பக்குவமாக தூக்கி அந்நாயின் காலை விடுவித்து கவனித்தபோது தான் தெரிந்தது...அந்த நாயின் நான்கு கால்களும் நான்குதிசையில் மடங்கி செயலிழந்து கிடந்தன...அதனால் எழுந்திருக்கவே முடியவில்லை...சத்தம்போட்டு அலறகூடமுடியவில்லை....நல்ல பலமான அடி....காரணம்..விபத்தின்போது அந்த நாய் வாகனத்தின் அடியில் மாட்டிக்கொண்டு தரையில் தேய்த்தபடி வாகனத்துடன் சுழன்று வந்துள்ளது. நாயின் அருகில் சென்று அதனை தூக்க ஒருவர் முன்வந்தார், ஆனால் அவரும் தயக்கத்துடன் நின்று விட்டார். ஏனென்றால் நாய் தனக்கு உதவி செய்ய வருகிறார் என்றா அக்கணத்தில் நினைக்கும்...தன்னை மேலும் துன்புறுத்த வந்துள்ளார் என்றெண்ணி நாய் திடிரென அவரை கடித்துவிட்டால் என்ன செய்வது?

ஆனால் வாயில்லா அந்த நாய் பட்ட வேதனை வெறும் வார்த்தைகளால் சொல்லி மாளாது மங்குனி...அதற்கு அந்த நாய் இறந்தே இருக்கலாம்...ம்ம்ம் இதை அதனுடைய கெட்ட நேரம் என்று சொல்வதா..இல்லை வாகனத்தில் வந்தவகளுடைய நல்ல நேரம் என்றுசொல்வதா.....யார்மீது குற்றம்....வேகமாக வந்த அந்த மானிடர்கள் குற்றமா....அல்ல திடிரென குறுக்காக பாய்ந்த அந்நாயின் குற்றமா....

பொதுவாக பகலில் பல நாய்கள் நிதானமாக வீதியை சர்வ எச்சரிக்கையோடு கடந்து செல்வதை நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் நடுநிசியில் அதே நாய்கள்

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வீதியை கடக்கின்றன...

அப்படி நடு நிசியில் வீதியைக் கடக்க முயலும் நாய்கள் லாரி போன்ற வாகனத்தில் அடிபட்டு நாதியற்று நசுங்கி சாகின்றன....அந்த நடு நிசி நாய்களுக்கு என்று விடிவு காலம் பிறக்குமோ.....ஆண்டவன் தான் அருள்புரிய வேண்டும்...மங்குனி....

“மன்னா இது உங்களுக்கே சற்று ஓவராக தெரியவில்லை...அவனவன் மனிதன் கொல்லப்படுவதுக்கே மருகுவதில்லை...ஈழத்தில் நம் சகோதர சகோதரிகளூக்கு எவ்வளவோ கொடுமை நடந்திருக்கிறது..அதனையே எவனும் கண்டுகொள்ளவில்லை...இதற்குபோய் கவலைப்பட்டு ஒரு பதிவையே வீணாக்கிவிட்டிர்களே மன்னா...நான் கூட தான் நேற்றைய நடு நிசியில் வீதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களிடம் சிக்கிவிட்டேன்...அதில் ஒரு நாய் என்ன நினைத்த்தோ தெரியவில்லை திடிரென்று ஓடிவந்து என்காலை கவ்வி விட்டது இதற்கென்ன சொல்லப்போகிறீர்கள் என் மட மன்னா?

ஒ அப்படியா சொல்லவேல்ல...இது எப்போ நடந்தது என் மங்குனி அமைச்சா? உன்னைப்பாத்தா சும்மா படுத்துறங்கும் நாய்கூடபாய்ந்து வந்து குதறுமே..பரவாயில்லை காலை கவ்வியதோடு விட்டதே...ஏதோ நாய் நல்லமூடில் சண்டை போட்டிருக்கும் போல அதான் காலைக் கவ்வியதோடு உன்னை விட்டுவிட்டது மங்குனி

“மன்னா...போதும்...இதற்கு நான் அந்த நாயிடமே கடிபட்டிருக்கலாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...