கிளிக்... கிளிக்... கிளிக்...

Monday, October 17, 2011

தமிழ்மணம் தாமாகவே தமிழ்பதிவர்களை நீக்கும்... அது எப்படி?



தமிழன் என்று சொல்லடா..... தலை நிமிர்ந்து நில்லடா....
என்னுடைய இந்தப்பதிவு கொந்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்:

மங்குனி: மன்னா.....மன்னா.....

ஏமரா மன்னன்: என்ன மந்திரியாரே...

மங்குனி: நெடுங்காலமாக நம் அரசவையில் நாம் காமெடி பண்ணி 
விளையாட ஒர் ஆள் இல்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தோம் அல்லவா...அந்த காலியிடத்தினை நிரப்புவதற்கு சரியான ஒரு சின்னப்பையன் சிக்கிவிட்டான்...வீட்டில் அவன் ஒழுங்காக போகோ டீவியையே எப்போதும் போல பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம்...அவனுடைய போறாதகாலம்..
நானும் ஒரு ரவுடிதான்..என்றபடியே... நம்மிடையே தாமாகவே வந்து 
சிக்கிவிட்டான்....


ஏமரா மன்னன்: அப்படியா...மிக்க மகிழ்ச்சி...யாரந்த சிறுவன்?..

மங்குனி: அவனுக்கு பேர் இல்லை மன்னா.....


ஏமரா மன்னன்: ஐயகோ..என்ன.....என் அரசாட்சியில்..  பெயரே வைக்கப்படதா ஒருவனா...

மங்குனி:ஆம் மன்னா பாவம் அவனுக்கு பெயர் வைப்பதற்கு கூட ஆள் இல்லையாம்....

ஏமரா மன்னன்: சரி நாமே அவனுக்கு பெயர் வைத்துவிடுவோம் அழைத்துவாருங்கள் அந்த சிறுவனை....

மங்குனி: மன்னா நாம் கூப்பிடவேண்டிய அவசியமே இல்லை தாமாகவே வந்துவிடுவான்...பாருங்களேன்....


பணியாள்: மன்னா தங்களுடைய இந்தப்பதிவினைப்பார்த்து ஒரு சிறுவன் தங்களைக்காண வந்துள்ளான் மன்னா!...

மங்குனி: மன்னா நான் சொல்லிவாய் மூடவில்லை அதற்குள்ளாகவே வந்துவிட்டான்....


ஏமரா மன்னன்: வெரி இண்ட்ரஸ்டிங்க்....வரச்சொல் அவனை.....

சிறுவன்: மன்னா காப்பாற்றுங்கள் மன்னா...


ஏமரா மன்னன்: வா சிறுவா வா...ஆமாம் உனக்கு பெயரே இல்லையாமே..ஏன் சிறுவா...ஏன்?

சிறுவன்: ஏன் இல்லை...எனக்கும் பெயர் இருக்கிறது...ஆனால் வெளியில் சொல்லமுடியாது....மன்னா


ஏமராமன்னன்: வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு அப்படி என்னடா ஒரு அவப்பெயர் உன்னுடையது.. சொல் பார்க்கலாம்... நானும் தெரிந்து கொள்கிறேன்...

சிறுவன்: வேண்டாம் மன்னா... நான் சொல்லமாட்டேன்...சொன்னால் எனக்கு ஆபத்து...நீங்களே ஏதாவது ஒரு பெயரை வைத்து என்னை கூப்பிடுங்கள் மன்னா...?

மங்குனி: மன்னா...பெயரே இல்லாத இவன் வலைப்பதிவர்களுக்கு பெயிரிலியாகத்தான் இதுநாள் வரை தெரியவந்துள்ளான்....

ஏமராமன்னன்: ஹா ஹா ஹா...அப்படியா இனி இந்தச்சிறுவனை பெயரிலி என்றே நாமும் அழைப்போம்.....


பெயரிலி: ஹையா ஜாலி ஜாலி....நன்றி மன்னா...நன்றி...

ஏமராமன்னன்: சரி உன்னைப்பற்றி நீயே சுருக்கமாக சொல் பார்க்கலாம்...

பெயரிலி: மன்னா வீட்டில் போகோ டிவி...கார்ட்டுன் டிவி...இதுபோன்ற டிவி சானல்களைப் பார்ப்பது என் முக்கிய தொழில்....பொழுது போக்கிற்காக என் தமிழ் மணத்தில் பதிவிடும் வலைப்பதிவர்களை கலாய்ப்பேன்....அதனால் அனைவரிடமும் செம அடி வாங்கி ரொம்ப கலைத்துவிட்டேன்....எங்கு போனாலும் அடிக்கிறார்கள் மன்னா...மூத்திர சந்திலும் வைத்து அடிக்கிறார்கள்...முட்டுசந்திலும் வைத்தும் அடிக்கிறார்கள்....இதுகூடபரவாயில்லை...மன்னா...
பொறுத்துக்கொள்வேன்..
ஆனால் கக்குஸ் போகும்போது கூட கன்னாபின்னாவென்று அடிக்கிறார்கள்....மன்னா...ஒன்றிரண்டுபேர் அடித்தால் பரவாயில்லை....பிரியாணி, சரக்கு எல்லாம் வாங்கிக்கொடுத்து ஆட்களை வரவழைத்து வந்து அடிக்கிறார்கள்....
நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிப்பது....அடிக்கும்போது
ஒருத்தன் சொன்னான்...டேய் இவன் நல்லவன்லேயே ரொம்ப முக்கியமான மோசமான நல்லவன்னு சொன்னான்...இப்படி சொல்லிசொல்லியே
வாய்மேலேயே அடிச்சாங்க... அடிதாங்கமுடியாம தான் அங்கிருந்து தப்பி தங்களிடம் தஞ்சம் அடைய வந்துள்ளேன்....

ஏமரா மன்னன்: ம்ம் உன்கதையை நானும் அறிவேன்...உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.....


மங்குனி: சிக்கிட்டியே சின்னப்பையா சிக்கிட்டியே....

பெயரிலி: மன்னா என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணமாட்டிங்களே..


மங்குனி: ஆஹா....பையா இனிமே காமெடியே உன்னவச்சிதாம்பா...

ஏமராமன்னன்: சரி சின்னப்பையா அதென்ன கையால மருந்து பாட்டில  
தடவிட்டு இருக்க...


பெயரிலி: மன்னா வலிபொறுக்கமுடியாமல் வைத்தியரிடம் போனேன் மன்னா! அவர்தான் இந்த மருந்து பாட்டிலைக்கொடுத்து தடவச்சொன்னார்..அதான் பாட்டில தடவிட்டு இருக்கேன்...

ஏமராமன்னன்: ஓ மங்குனி இவனுக்கு இம்புட்டு அறிவா!... 
ஏதேது அறிவில் உன்னை விட மிஞ்சிவிடுவான் போல....மருந்தை தடவாமல் மருந்து பாட்டிலை தடவுகிறானே இந்த மக்குப் பயல்.....


பெயரிலி: மன்னா... இதுமாதிரியெல்லாம் என்னை கலாய்த்து பதிவெழுதினால் நான் உங்களை தமிழ் மணத்திலிருந்து நீக்கிவிடுவேன்...

ஏமராமன்னன்: ஹா ஹா ஹா...அதுக்குத்தாண்டா ராசா இந்தப்பதிவே.... தலைப்பை பார்க்கவில்லையா நீ......நான் ஏமராமன்னன்டா...அதுவும் தமிழமன்னன் டா....உன்கிட்ட வந்து என்ன நீக்குன்னு கெஞ்சுவேன்னு பாத்தியா....நான் போடுற பதிவுலேயே நீயே வந்து என்னை நீக்கிடு தம்பி...அதுதான் உனக்கு நல்லது...


மங்குனி: மன்னா...இவன் இங்கேயும் வந்து பின்னூட்டம் போட்டு தொல்லை பண்ணுவான் மன்னா...நமக்கு ஆயிரத்தெட்டு அலுவல் இருக்கிறது.....அதனிடையே இவனுக்கு எப்படி பதில் போடுவது..

ஏமராமன்னன்: ஆமாம் மங்குனி..உனக்கு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன்..அதாவது போன பதிவில் நீ வீதியில் உலா போகும் போது ஓடிவந்த ஒரு நாய் உன்னைப் பார்த்துக் குரைத்து கடித்தது என்று கூறினாய் அல்லவா...அந்த நாயை நீ மீண்டும் திட்டினாயா...அல்லது பதிலுக்குத்தான் கடித்தாயா...நன்றியுள்ள நாயையே நீ கண்டு கொள்ளவில்லை...பெயரில்லாத இந்த பில்லக்கா பையனுக்கா பதில் எழுதி பெரியமனிதனாக்கப் பார்க்கிறாய்...மங்குனி.......


பெயரிலி: என்ன நாயிடம் ஓப்பிட்டு என்னை கேவலப்படுத்துகிறீர்களா..மன்னா?.

மங்குனி: சே..சே..நீ சின்னப்பையன் என்று மறுபடியும் நிருபித்து விட்டாயே...என் மன்னர் அப்படி சொல்லவில்லை..சிறுவா....நாயுடன் உன்னை ஓப்பிட்டால் அது நன்றியுள்ள நாயை இழிவுபடுத்துவது போன்றதாகும்...அந்த தவறை என் மன்னர் ஒருபோதும் செய்யமாட்டார்....


பெயரிலி: மன்னா உங்களை ஆங்கிலத்திலேயே திட்டுவேன் மன்னா ஜாக்கிரதை....

ஏமரா மன்னன்: நீ தமிழ்ல திட்டினாலே நான் கண்டுக்கமாட்டேன்..இதில நீ ஆங்கிலத்த வேற உபயோகிக்கப் போகிறாயா...மதிகெட்ட மடையா மடையா..உனக்கு வேற வேலையே இல்லையா... நீ அந்த வேலைக்கெல்லாம் லாயக்கு ஆக மாட்டப்பா....என்ன புரியுதா.. போப்பா போ..வீட்டுக்கு போய்...போகோ டிவி பார்....இல்லை வேற ஏதாச்சும் பார்...இங்க வராதே என்ன...
இனி என் தமிழ்பதிவர்கள் உன் குரலுக்கு செவி சாய்க்க மாட்டார்கள்....
அவர்கள் உன்னைப்போல வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல....ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்க..... உன்ன வச்சிதான் இனி எல்லா காமெடியும்.....நீ சர்தார் ஜோக்ஸ் படிச்சிருப்ப...விஜய் ஜோக்ஸ் படிச்சிருப்ப....ஆனா பெயரிலி ஜோக்ஸ் படிச்சதில்லியே....இனிமே படிப்ப....வலைப்பதிவர்களே.. இனி உங்களுக்கு இது தான் வேலை...

இனி இந்த அரசவையின் காமெடி பீஸுக்கு பேரே பெயரிலிதான்...


நீண்ட நாள் தேடுதல் இந்தப் பெயர்......சிக்கிவிட்டது.....


காமெடி ஆட்டம் இனி அரசவையில் களை கட்டும்...................


நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த 
நிலைகெட்ட மாந்தரை நினைக்கும் போது..


ஏ மாற்றமே....மாறாத நீயே மாறிவிடுவாய்.. 
மாறாத இந்த மடையனை மாற்ற முயலும்போது....














57 comments:

Unknown said...

இது எங்க ஏரியா

பெயரிலி உள்ள வராதே.....

மத்தவங்க வாங்க...வாங்க....

ஆமினா said...

சிரிச்சு முடிச்சுட்டு வரேன் சகோ

ஒரு மணி நேரமாவது டைம் வேணும்

ஹா...ஹா...ஹா...ஹா....

குறையொன்றுமில்லை. said...

செந்தில் நல்லா தான் கலாய்ச்சிருக்கே. நடத்து, நடத்து,

Unknown said...

@ ஆமி

ரொம்ப நன்றி ஆமி...எல்லாபுகழும் பெயரிலிக்கே...
வாழ்க பெயரிலி...வளர்க அவர் புகழ்...

ஜெய்லானி said...

உள்குத்து வெளிகுத்து பார்த்திருக்கேன் ..இப்பிடி ஓடவிட்டு குத்தினதை இப்போதான் பார்க்கிரேன் ஹா..ஹா... செம காமெடி ...அதுவும் 23 புலிகேசி ஸ்டைலில் படிச்சால் ஹா..ஹா... :-)))

நாய் நக்ஸ் said...

கலக்கல் ...

Unknown said...

@லஷ்மிமா...
ரொம்ப நன்றி...
@ஜெய்லானி..
முதல் முறையாக வந்து கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி..
@NAAI-NAKKS..
க்ருத்துரையிட்டமைக்கு நன்றி..சார்..

அப்படியே கொந்தளித்துக்கொண்டிருக்கு அனைத்து பதிவர்களுக்கு இப்பதிவினை கொண்டு சேருங்கள்...அவர்கள் மனம் ஆறட்டும்...

'terror-kummi' ellaam ini summaa... said...

Haa....haa...haa....haa....haa....

////அவர்கள் உன்னைப்போல வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல....ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்க..... உன்ன வச்சிதான் இனி எல்லா காமெடியும்.....நீ சர்தார் ஜோக்ஸ் படிச்சிருப்ப...விஜய் ஜோக்ஸ் படிச்சிருப்ப....ஆனா பெயரிலி ஜோக்ஸ் படிச்சதில்லியே....இனிமே படிப்ப....வலைப்பதிவர்களே.. இனி உங்களுக்கு இது தான் வேலை...////


ready... joot... one.. two.. three...

start the music..!

Admin said...

நல்ல நகைச்சுவை நண்பரே!

ஆனால் ??மூத்திர சந்திலும் வைத்து அடிக்கிறார்கள்...முட்டுசந்திலும் வைத்தும் அடிக்கிறார்கள்....இதுகூடபரவாயில்லை...மன்னா...
பொறுத்துக்கொள்வேன்..
ஆனால் கக்குஸ் போகும்போது கூட கன்னாபின்னாவென்று அடிக்கிறார்கள்....//

இதனை தவிர்த்திருக்கலாம். இல்லையென்றால் அவருக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

மற்றபடி பதிவை படிச்சு நல்லா சிரிச்சேன்.

ஜலீலா said...

அடபதிவுகுல நம்ம பெரிய மங்குனி அமைச்சரையே மிஞ்சிடுவீங்க போல/
ஜூப்பர்ன்னா ஜூப்பர் அப்படி ஒரு ஜூப்பர் செந்தில்
ஜலீலா

பால கணேஷ் said...

அடாடா... பெயரிலி ஜோக்ஸ்... நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க... அசத்துங்க...

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

வெங்கட் said...

// நீ அந்த வேலைக்கெல்லாம் லாயக்கு ஆக மாட்டப்பா....//

ஹா., ஹா., ஹா..!!
இப்ப அவருக்கு இது புரிஞ்சிருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு வில்லத்தனம்யா......

TERROR-PANDIYAN(VAS) said...

//உள்குத்து வெளிகுத்து பார்த்திருக்கேன் ..இப்பிடி ஓடவிட்டு குத்தினதை இப்போதான் பார்க்கிரேன் ஹா..ஹா... செம காமெடி ...அதுவும் 23 புலிகேசி ஸ்டைலில் படிச்சால் ஹா..ஹா... :-)))//

100 ரிப்பீட்டு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நீண்ட நாள் தேடுதல் இந்தப் பெயர்......சிக்கிவிட்டது.....//////

தேடிவந்து சிக்கிவிட்டது.........

J.P Josephine Baba said...

இப்படி எல்லாம் வார்த்தை சண்டை போடலாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா

karthikkumar said...

:)))))))

வெளங்காதவன்™ said...

//.ஒன்றிரண்டுபேர் அடித்தால் பரவாயில்லை....பிரியாணி, சரக்கு எல்லாம் வாங்கிக்கொடுத்து ஆட்களை வரவழைத்து வந்து அடிக்கிறார்கள்....////

ஹி ஹி ஹி... ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

Starjan (ஸ்டார்ஜன்) said...

மேற்படி, தமிழ்மண நிர்வாகிக்கு என்னுடைய கண்டனங்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரிக்க சிரிக்க நல்ல காமெடி.. :))

Unknown said...

@Abdul basith
\\இதனை தவிர்த்திருக்கலாம். இல்லையென்றால் அவருக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.\\

ஹி ஹி ஹி தவிர்க்க வேண்டியதை இப்பதிவில் சொல்லியிருப்பதே அந்த பண்பாளர் தான்... நான் ஓன்றும் செய்ய இயலாது...ஒரு குடிகாரனை திரைப்படத்தில் காட்டவேண்டுமானால் அவன் குடிப்பதைக்காட்டினால் தான் மக்களுக்கு புரியும்...அதே போல தான் இங்கு அந்த பண்பாளர் தன்னைப்பற்றி விரிவாக அவரே சொல்லியுள்ளார்..

இங்கே வந்து கருத்துரை இட்டதற்கு மிக்க நன்றி..அடிக்கடி வாருங்கள்...

Unknown said...

@ ஜலிலா
வாங்க வாங்க நீங்க போட்ட இந்த ஜூப்பர் கமெண்டுக்கு ஒரு ஜூப்பர் நன்றி...
\\அடபதிவுகுல நம்ம பெரிய மங்குனி அமைச்சரையே மிஞ்சிடுவீங்க போல//

இது மட்டும் மங்குனிக்கு தெரிஞ்சிது அவ்ளோதான்..

அவர் முந்திரிகாட்டுக்கு போயிடுவார்....

Unknown said...

@ கணேஷ்

//அடாடா... பெயரிலி ஜோக்ஸ்...//

சார் இந்த பெயரிலி என்ற பெயர்ல வாஸ்து சரியாக அமையாத காரணத்தால பெயரிலி என்ற பெயரை மாத்திவிடலாம்னு நினைச்சிருக்கேன்...
தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு நன்றி சார்..

Unknown said...

@unmaikal
இங்கே உண்மைகளை உணர்த்தியமைக்கு நன்றி...

Unknown said...

@வெங்கட்

உங்களோட பிசியான நேரத்திலகூட இவ்ளோ தூரம் இங்க வந்து உங்க கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...

Unknown said...

@பன்னிக்குட்டி..

\\என்னா ஒரு வில்லத்தனம்யா.....//

யாருக்குன்னா...கொஞ்சம் தெலிவா சொல்நா..
நமக்கு உங்களமாதிரியே கொஞ்சம் பல்பு வீக்னா..
அப்புறம் பன்னிக்குட்டின்னா, எனுங்னா இந்தப்பக்கம் ஆளையே கானோம்..
என்னோட அடுத்த பதிவோட தலைப்பே நீங்கதாங்கண்ணா...மறக்காம குடும்பத்தோட வந்துடுஙகண்ணா...

Unknown said...

@J.P Josephine Baba
வாங்க ரொம்ப நன்றி....

//இப்படி எல்லாம் வார்த்தை சண்டை போடலாமா?//

பயப்படாதிங்க...சண்டையெல்லாம் சும்மா.. ஒரு உலாலூலலாவுக்காகத்தான்....

Unknown said...

@TERROR-PANDIYAN(VAS)

ரொம்ப நன்றி சார்...

//உள்குத்து வெளிகுத்து பார்த்திருக்கேன் ..இப்பிடி ஓடவிட்டு குத்தினதை இப்போதான் பார்க்கிரேன் ஹா..ஹா... செம காமெடி ...அதுவும் 23 புலிகேசி ஸ்டைலில் படிச்சால் ஹா..ஹா... :-)))//

100 ரிப்பீட்டு... :))//

பக்கான்னா..பக்கா...

Unknown said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
இதுக்கெல்லாம் எதுக்கு சத்தியாம் நான் நம்பறேன்..

\\சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா\\

வலிக்கு தடவ மருந்து வேணுமா...இல்ல மருந்துபாட்டில் வேணுமா சார்....மருந்து வேணுமுன்னா இங்க வாங்க..மருந்துபாட்டில் வேணும்னா அந்த பண்பாள பெருந்தகைகிட்டதான் நீங்க போவனும்...

கருத்து பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி போலிஸ்சார்..
போனபதிவுல உங்கள கலாய்ச்சிருக்கேன்...கோச்சிக்காதிங்க..ப்ளிஸ்..

Unknown said...

@karthikkumar

ரொம்ப நன்றி கார்த்திக்.....

Unknown said...

@வெளங்காதவன்

வாங்க நீங்க வந்தப்புறம்தான் ஒன்னு வெளங்கிடுச்சி அது என்னான்னா...
\\ஹி ஹி ஹி... ரூம் போட்டு யோசிப்பாங்களோ?//
இதுக்கெல்லாம் ரூம்போட்டு யோசிக்கத்தேவையேல்லை...
அந்தப் பண்பாளருடைய பின்னூட்டங்களை படிச்சாலேபோதும்...எல்லாம் தானா வரும்...

Unknown said...

@Starjan ( ஸ்டார்ஜன் )
கண்டனம் தெரிவித்ததற்கும் கருத்து பகிர்ந்ததற்கும் ரொம்ப நன்றி சார்...அடிக்கடி இங்க வாங்க...

Unknown said...

இங்கே கருத்துரை பகிர்ந்து கொண்ட, பகிர்ந்து கொள்ளப்போகிற அனைத்து வலையுலகபிரம்மாக்களுக்கும் என் கோடானுகோடி நன்றிகள்...
மேலும் இங்கே புதிதாக ஃபாலோவர் ஆனவங்களூக்கும் என்னோட நன்றிகளை.சமர்ப்பிக்கிறேன்..

Kannan said...

Can I expect that this blogger be active in this blog until the problem is resolved or is forgotten? Good idea to exploit the fight. Nice entertainment. Congrats.

smart said...

இது சரியான மொக்கையாக இருக்கிறதே நீங்கள் இன்னும் வளரனும் தம்பி

Unknown said...

மாப்ள பின்னிபுட்டய்யா அப்படிப்போடு அறிவால(அருவாள அல்ல!) ஹிஹி!

நாய் நக்ஸ் said...

சார் UNGA MAIL ID ENAKKU VENDUM....

IM IN CHIDAMBARAM....

MY ID IS ..

NAKKSABARAM2009@GMAIL.COM

Unknown said...

வெற்றி வெற்றி....தமிழ்மணத்திலிருந்து இந்த ப்ளாக்கை தூக்கிவிட்டார்கள்....ஹா ஹா ஹா..
எப்பூடி......

Unknown said...

ஏ தமிழ் மணமே அந்த பயம் இருக்கட்டும்...என்னுடைய தலைப்பு நல்லா வேலை செய்துப்பா....

Unknown said...

@விக்கியுலகம்...
ரொம்ப நன்றி நண்பரே...இனிமே நம்ம அறிவாட்சிதான்...

Unknown said...

தமிழ்மண ஓட்டுப்பட்டையா தூக்கிட்டோம்ல...

சபேஷ் பாக்யா said...

ஆமா அவுங்களே தூக்கின பின்னாடி நீங்க பட்டைய கெளப்பி என்னத்த
நல்ல தரக்கட்டுப்பாளருங்க நீங்க

மாணவன் said...

ஹா...ஹா..

காமெடி கலாட்டா கலக்கல்... :-)

Unknown said...

ha...ha...

comedy kalattave inge thana nadakkuthu

சி.பி.செந்தில்குமார் said...

உங்க பேரும் என் பேரும் ஒண்ணூ, அதான் வந்து பார்த்தேன், செம காமெடி.. ஓக்கே இனி ஃபாலோயிங்க். ஹா ஹா

savitha said...

ஹலோ செந்தில் உங்க பதிவு சூப்பர்... மனதுக்கு ரிலாக்ஸ் ஆக இருந்துச்சு... உங்க ஆலோசனை க்கு மிக்க நன்றி.. நான் இதான் முதல் முறையா ப்ளாக் எழுதுறேன், கருத்துரை கூட இது தான் 1st டைம்.. இன்னும் ப்ளாக் ல அடிப்படை விஷயம் லாம் தெரியல.. நா எழுதுவது எல்லாருக்கும் புரியுதா திருத்தமா இருக்கானு நம்பிக்கை இல்லாம யாருக்கும் நா ப்ளாக் எழுதுறத நண்பர்களுக்கு கூட சொல்லவில்லை.. முதலில் கற்று கொள்வோம் என்று நினைத்தேன்.. உங்களால் முடிந்ததை எனக்கு கற்று தாருகள்..

Unknown said...

@சபேஷ் பாக்யா

//ஆமா அவுங்களே தூக்கின பின்னாடி நீங்க பட்டைய கெளப்பி என்னத்த நல்ல தரக்கட்டுப்பாளருங்க நீங்க//

ஹி..ஹி...ஹி அவங்களே தூக்கல.. நாங்க தூக்கவச்சோம்ல..

Unknown said...

@ மாண்புமிகு மாணவன்...

ரொம்ப தாங்ஸ் வாத்தியாரே...

Unknown said...

@வைரை சதிஷ்

பட்டைய எப்படி கெளப்புறதுன்னு முழிச்சிக்கிட்டிருந்தேன்.. உங்க ப்ளாக்ல நீங்க பட்டைய எப்புடி கெளப்புறதுன்னு பட்டய கெளப்பியிருந்திங்களா... அத்த பாத்துதான் இங்க நானும் பட்டைய கெளப்புனேன்....அதுக்கு முதல்ல ரொம்ப நன்றி....
யாராவது பட்டைய கெளப்புனும்னு நினைச்சிங்கன்னா உடனே ஓடி இங்க போங்க....

http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_17.html

Unknown said...

@சி.பி.செந்தில்குமார்

அட்ராசக்க!...அட்ராசக்க!...அட்ராசக்கன்னா...
அண்ணா ரொம்ப நன்றின்னா அடிக்கடி வாங்கண்ணா......

Unknown said...

@ savitha

என்ன பக்காவா பதிவு எழுதிறீங்க நீங்க...எந்த டவுட்ன்னாலும் கேளுங்க, நான்மட்டும் இல்ல நம்ம வலைப்பதிவர்கள் அனைவரும் கற்றுதருவார்கள்..
புதிதாக பதிவு எழுத வருபவர்களை ஊக்குவிப்பதில் நம் வலைப்பதிவர்களுக்கு நிகர் அவர்களே...நிறையபேர்
ப்ளாக்கர் டிப்ஸ் அவங்க அவங்க வலைப்பதிவுல கொடுத்திருக்காங்க...
எங்க தல வெங்கட் கூட எனக்கு இங்க ஒரு பதிவுல டிப்ஸ் கமெண்ட் கொடுத்திருக்கார் பாருங்க...
பன்னிக்குட்டி இங்க ஒரு பதிவுல வேர்டு வெரிஃபிகேஷன் நிக்க சொல்லி அட்வைஸ் கமெண்ட் கொடுத்திருக்கார் பாருங்க...சோ டோண்ட் வொரி...
ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்..நீங்களூம் என்னை மாதிரியே அடக்கி வாசிக்கிறீங்க்...ஹி..ஹி..ஹி..

சவியோட லேட்டஸ்ட் பதிவு:
http://savithaskitchen.blogspot.com/2011/10/blog-post_17.html

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடாடா இம்புட்டு நாள் இத மிஸ் பண்ணிட்டேனே...

Unknown said...

@தமிழ்வாசி - Prakash
முதல்முறையா இங்க வந்து என் பதிவை வாசித்த தமிழ் மன்னனுக்கு ஏமராமன்னனின் நன்றிகள்..

Mohamed Faaique said...

அட..அட...அட.... இந்த மன்னனுக்கு 100 பொற்கிளி பார்சல்...

Unknown said...

@ Mohamed Faaique
\\அட..அட...அட.... இந்த மன்னனுக்கு 100 பொற்கிளி பார்சல்...//

பரிசளித்தமைக்கு மிக்க நன்றி...நீவீர் வாழ்க பல்லாண்டு....