கிளிக்... கிளிக்... கிளிக்...

Monday, October 10, 2011

யாரிந்த ஏமரா மன்னன் - 2

எல்லாரும் என்னடா இவன்... என்னமோ
வலைப்பூவிற்கு தலைப்பு வச்சிருக்கானே ....இந்த தலைப்பு எல்லாரையும் ஈர்ப்பது மாதிரியே இல்லையே என்று நினைப்பவர்களுக்காகத்தான் இந்த பதிவு.....
இந்த ஏமரா மன்னன் என்ற வார்த்தைய நானா சொல்லலிங்க.. அது வள்ளூவர் சொன்ன தூய தமிழ் வார்த்தைங்க....

பல தமிழ் வார்த்தைகளை நாம் பயன் படுத்தாமல்
அப்படியே விட்டுவிட்டோம்ங்க.....அப்படில்லாமல் நாம நிறைய புது வார்த்தைகளை கண்டறிந்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமானால் இனி மெல்ல நம் தமிழ் வாழுமுங்க....வாழும்....வாழும்......

ஏமரா மன்னர்கள் பற்றிய கருத்து சொறிந்த ஒரு விளக்கவுரை:

ஏமரா மன்னன் - காவல் இல்லாத அரசன் அதாம்பா போலிசே
வச்சுக்காத பேமானி ராஜாவாம்பா...

ஏமரா மன்னன் - தக்க துணை இல்லா அரசன் அதாம்பா சரியான சப்போர்ட கிடைக்காத சாம்பார் ராஜா....

ஏமரா மன்னன் - நானே ராஜா நானே மந்திரி.....எல்லா வேலையும்
இவர் ஒருத்தரே செய்வார்...அதாம்பா சரியான இளிச்சவாயரு...

ஏமரா மன்னன் - இவர வச்சுதான் எல்லாரும் காமெடி பண்ணுவாங்க
அதாங்க சரியான டம்மிபீஸீங்க... டம்மிபீஸூ....

ஏமராமன்னன் - இந்த ராஜா மட்டும்தாங்க எல்லார்கிட்டயும்
செமத்தியா அடிவாங்குவாருங்க....அதாங்க சூப்பரான ஒரு காமெடி பீஸுங்க...

ஏமராமன்னன் - இவருகிட்ட ஒரே ஒரு மந்திரிமட்டும்தாங்க ருப்பார்...அவரு வேறு யாருமில்லிங்கோ...வரு...... அவருதாங்க....மங்குனி அமைச்சருங்கோ...

ஏமரா மன்னன் - மொத்தத்தில இவரு அந்த வேலைக்கு லாயக்கே.. ஆகமாட்டாருங்கோ.....

இவரோட
நடை இராஜ (வாத்து) நடைங்கோ.....
பார்வை இராஜபார்வைங்கோ...பக்கத்தில இருப்பதே
பாதிதான் தெரியுமாங்கோ.........இனிமே இங்க இவரோட இராஜாங்கம்தான்......
மங்குனியோடு இனி ஏமராமன்னனோட இராஜநடை தொடரும்......
எலே மங்குனி ஓடி வா......முந்திரிதோப்புல மங்குனி மந்திரி எட்டு மணிக்கு மேல முழு மப்புல உக்காந்ததுக்கே கடவுள் வந்துட்டார்னா.....இராஜாவோட வேட்டைக்குவேற போக்ப்போறாரு..... அதிரடி அட்டகாசம் ஆரம்பமாகப்போகுதுங்கோ.....Wait and See......

14 comments:

குறையொன்றுமில்லை. said...

ஏமரா மன்னனுக்கு இவ்வளவு அர்த்தங்களா? நல்லா நகைச்சுவையுடன் சொல்லி இருக்கே. நல்லா இருக்கு.

கோலா பூரி. said...

நானும் ஏமரா மன்னன்னா என்னன்னு யோசிச்சேன். ஒன்னும் தெரியல்லே. உங்க இந்தபதிவு படிச்சப்பரமும் ஒன்னும் தெரியல்லே:))
இந்தவாட்டி சீக்கிரமே வந்துட்டேனே.

Unknown said...

@லஷ்மிமா
முதல் ஆளா கருத்துரையிட்டதற்கு நன்றி....இன்னும் நிறைய அர்த்தங்கள் ஏமரா மன்னனுக்கு இருக்கு...ஏன்னா எல்லோரும் இந்நாட்டு ஏமராமன்னர்கள்தான்.....

Unknown said...

@கோமு

கருத்துக்கு நன்றி ஃப்ரெண்ட்...

\\உங்க இந்தபதிவு படிச்சப்பரமும் ஒன்னும் தெரியல்லே:))//

தெரியில்லையா...ஒன்னுமே தெரியில்லையா..எதுவுமே புரியலையா....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

ஆமினா said...

யாரு சொன்னா தலைப்பு கவராதுன்னு...... இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கவே அவனவன் தலைய போட்டு பிச்சுட்டிருப்பாய்ங்க.........

கலக்குங்க செந்தில்..... போட்டோ போடாம, உண்மை பேர் சொல்லாம இருந்தா இன்னும் நாட்டுல பல பேர பைத்தியமாக்கி விட்டுருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்க :-))

யே....யப்பா........... ஏமரா மன்னனுக்கும் கூடவா மின்னஞ்சல் மூலம் சந்தாதார் ஆகுக??????????? கொடுமையே

ஆமினா said...

முதல் தமிழ்மணம் ஓட்டு என்னுடையது

நீங்க கூட போட்டுக்கலாம்.. ஆரும் கேட்க மாட்டாக

ஆமினா said...

2 பேரும் ஒரே நேரத்துல கமெண்ட் போட்டுருக்கோம் :-)

Unknown said...

@ஆமினா

அற்புதம் ஆமி...பதிவும் சூப்பரா எழுதுறீங்க ...
கமெண்ட்போடுறதிலேயும் கலக்கறீங்க..

\\யே....யப்பா........... ஏமரா மன்னனுக்கும் கூடவா மின்னஞ்சல் மூலம் சந்தாதார் ஆகுக??????????? கொடுமையே//

\\நீங்க கூட போட்டுக்கலாம்.. ஆரும் கேட்க மாட்டாக//

ஹி..ஹி...எப்படி ஓட்டு போடுறது ஆமி தெரில்லையே....

இத எப்படி நீக்கறது...

குறையொன்றுமில்லை. said...

மேல தமிழ்மணம் ஓட்டுப்பட்டை தெரியுதில்லையா? அதில் கை போல இருக்கெ அதை க்ளிக் பன்னின ஓட்டு ப்போடலாம் செந்தில்.

Unknown said...

@லஷ்மிமா

தகவலுக்கு ரொம்ப நன்றி லஷ்மிமா...

Mohamed Faaique said...

சுருக்கமா சொன்னா “சிரிப்பு மன்னன்”னு சொல்லலாமா???

Unknown said...

@Mohamed Faaique

ஒரே நாளில் என்னோட எல்லாபதிவையும் பொறுமையோட படிச்சி பக்காவா கருத்து போட்டிருக்கீங்க... சாதனைமன்னாகிய உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்...
டுபுக்கு மன்னன்...சிரிப்புமன்னன்...இப்படி புதுபுது அர்த்தங்கள ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில ஏமராமன்னனுக்கு சேர்த்திருப்பதாக ஒற்றன் தகவல் கொண்டுவந்துள்ளான்....

வெளங்காதவன்™ said...

கொலை செய்வது எப்படின்னு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்...
போட்டோ சூட்டிங் இருக்கு....
வாரீயளா?

Unknown said...

@வெளங்காதவன்:
\\போட்டோ சூட்டிங் இருக்கு....
வாரீயளா?//
.நீங்கதானே அதுக்கு மாடல்...நான் என்னுடைய எந்த வாளை எடுத்துவருவது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்..என் உடைக்கு மேட்சா இருக்கவேண்டாமா....ஹி. ஹி.. ஹி..