கிளிக்... கிளிக்... கிளிக்...

Monday, October 31, 2011

மரக்கல் மன்னன்...கோகுலத்தில் சூரியன்....

Our sincere thanks to Mr.VENKAT 
for his special best performance in this Post 
and this Post especially dedicated to VKS&VAS
மங்குனி: மன்னா எங்கே அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கீறீர்கள் மன்னா?
ஏமராமன்னன்: போகும்போதே கேள்விகேட்டுவிட்டாயா...
ம்ம்ம்..போகிறகாரியம் கூமுட்டையா போகாம கொய்யா பழமானா சரி.....
மங்குனி: அப்படி என்ன ஒரு அதிமுக்கிய வேலைக்கு செல்கிறீர்கள் மன்னா...
ஏமராமன்னன்:மீண்டும் கேட்கிறாயா...   நீ மங்குனி என்பதை மீண்டும் மீண்டும் நிருபீப்பதில் உனக்கு நிகர் நீயே..நான் குருகுலத்துக்கு போகப்போகிறேன் நம் அண்டைநாட்டு மன்னர் கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கார் அல்லவா அதன் முடிவு இன்று வெளிவரப்போகிறது...அதை தெரிந்து கொள்ள செல்கிறேன் மங்குனி...
மங்குனி: என்ன வெங்கட் முதியோர் கல்வியில் பயில்கிறாரா மன்னா...
ஏமராமன்னன்: இல்லை இலலை அவர் முதலாம் ஆண்டு கல்வியை முடிப்பதற்குள் அது முதியோர்கல்வியாகிவிட்டது மங்குனி....
மங்குனி:ஹா ஹா ஹா....அடித்தளம் ஆழமாக பதித்து விட்டார் போல மன்னா...
ஏமராமன்னன்: என்ன ஏளனம்....இது மட்டும் அவர் காதில் விழுந்தால் உன் டங்குவாரை கிழித்துவிடுவார் ஜாக்கிரதை......
- - - - - -
இடம்: குருகுல கிரவுண்டு

அனைத்து மன்னர்களும் மன்னிகளும் மொத்தப்பல்லும் தெரிய சிரித்துக்கொண்டு சூரியனுக்கே ஏரோப்ளேன் விட்டமாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் கை கொடுத்துக்கொண்டனர்.

கோகுலத்து மன்னர் வெங்கட் மனதுக்குள் ”என்னைப்போலவே ஒன்றாம் வகுப்பில் 30 வருடங்கள் பெயிலான பன்னிக்குட்டி கூட பாஸாகிவிட்டாரே....அட ரெண்டு லட்டு போட்டா அதான் எட்டுன்னு சொல்ற வெளங்காதவன் கூட பாசாயிட்டார் போல...இவரே பாஸாயிட்டா நாம் கூட பாஸ்தான்” என்ற நம்பிக்கையோட ஒட்டப்பட்டிருந்த காகிதத்தை எட்டி எட்டி பார்த்தார் இந்த சூரியமன்னர்...

கோழிமுட்டையில் கல் அடிச்சது போல நொடுக்கென ஆகியது மன்னர் வெங்கட்டுக்கு...
முப்பது வருடங்களாக முதல் வகுப்பில் பெயிலான மன்னர் முப்பத்தியொன்றாவது வருடமும் பெயிலாகி சரித்திரசாதனை படைத்திருந்தார்...
ஆட்டு மந்தைக்கு நடுவே வேட்டைநாயைபோல வீரமோடு வந்தார் மன்னர்....
தான் தேர்வில் தேர்ச்சி அடையாததன் காரணத்தை அவையில் கூடி ஆராய்ச்சி செய்ய ஆணையிட்டார் மன்னர்....
ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தன....

தேர்வு நேரத்தில் படிக்காமல்
1.தென்னைமரமேறி கிணற்றில் குதிப்பது...
2.ரெட்டை நாயை கண்டால் கல்லால் அடிப்பது...
3.ஒத்தக் காலில் நின்னு சைக்கிள் விடுவது....
4.ஏரியில் மீன் பிடித்து குமரிகளிடம் கொடுத்து, பனைமரத்தடியில் பிரியாணி தின்பது...
5.படிப்பது மண்டையில் ஏறவில்லையானால் காலோரம் வந்த பூனையை எட்டி உதைப்பது...
6.கரப்பான் பூச்சியை காலால் மிதிப்பது.....கட்டுவீரியனை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது..
7.சுண்ணாம்பு சுவத்தில் தலையை முட்டிக்கொண்டு விதவிதமாக சிரிப்பது...
8.ஈயை எட்டி உதைக்கிற எருமை மாட்டை வேடிக்கை பார்ப்பது..
9.துருபிடித்த சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு ஊரை சுத்தியது..
10.பூஜ்யத்தில் ஒன்னு போகுமா என்ற கேள்விக்கு வாய்க்குள் பன்னு போகும்போது பூஜ்யத்தில் ஒன்னு போகாதா என்று பதில் கேள்வி சொன்னது

போன்ற டாப்டென் காரணங்களே போட்ட தண்டவாளததில் ரயில் போவதுபோல வருஷமானா மன்னர் வெங்கட்பெயிலாவதற்கான காரணங்கள்....

இதையெல்லாம் விட தலையாய, அதிமுக்கிய முதல் காரணமொன்று என்னவென்றால் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அடிக்கடி

தர்ம அடி வாங்கி தர்மாஸ்பத்திரிக்கு செல்வது.......

டிஸ்கி: கல்லைகூட செதுக்கி சிற்பமாக்கிவிடலாம்...ஆனால் இந்த மரக்கல் மன்னனை முதலாம் வகுப்பில் பாஸ் செய்யவைப்பது....ஹா ஹா ஹா விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.......

பகிர் பகிர் லிங்க்: இங்கிலிசு தெரிஞ்சவங்க படிங்க....படால்னு பக்குன்னு ஒரு பகிர் பயங்கர நியுஸ்.....முக்கியமா சமையல் பதிவு போடுபவர்கள்....தெரிந்து கொண்டு எச்சரிக்கையடைய...மைக்ரோவேவ் மக்களை கொல்லுகிறதா......






26 comments:

Unknown said...

ஹி...ஹி...ஹி...வாங்க....என்னுடைய அடுத்தபதிவுகளின் நாயக நாயகிகளே வாங்க வாங்க வந்து புக் பண்ணிருங்க...முதலில் வருபவர்களூக்கே முன்னுரிமை...வராவிட்டால்...ஹா ஹா ஹா

Mohamed Faaique said...

///கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கார் அல்லவா அதன் முடிவு இன்று வெளிவரப்போகிறது...அதை தெரிந்து கொள்ள செல்கிறேன் மங்குனி...///

அதுல தெரிந்து கொள்ரதுக்கு என்ன இருக்கு... வழமை போல பெயில்’தான்...

Unknown said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

சீ.போ. அவர்களே நீங்கதான் என்னோட அடுத்தப்பதிவின் போஸ்ட்ஹீரோ..அதாங்க பதிவுநாயகன்... இப்பவே ரெடி ஆகிக்குங்க.....

வெளங்காதவன்™ said...

))

#இங்கதான் இருப்பேன்... அப்பாலிக்கா வாரேன்...

Mohamed Faaique said...

//தென்னைமரமேறி கிணற்றில் குதிப்பது...////

கிணறுக்கு பக்கத்தால போறவனையும் தள்ளி விடுரது...

Unknown said...

@வெளங்காதவன்

நீங்க ஒன்னாம் வகுப்பு பாஸாங்கோ...

Unknown said...

@Mohamed Faaique சொன்னது…
//தென்னைமரமேறி கிணற்றில் குதிப்பது...////

கிணறுக்கு பக்கத்தால போறவனையும் தள்ளி விடுரது...///

ஹா ஹா ஹா...
அனுபவம் அறிக்கை விடுதா மன்னா

வெளங்காதவன்™ said...

//ஏமரா மன்னன் பொன்.செந்தில்குமார் சொன்னது…

@வெளங்காதவன்

நீங்க ஒன்னாம் வகுப்பு பாஸாங்கோ...
///

இடது கை பெருவிரல் ரேகை...

ஹி ஹி ஹி...

நாய் நக்ஸ் said...

எப்ப தான் வெங்கட் பாஸ் பண்ணுவாரு ???
நீங்க வேணா டியூஷன் எடுங்களேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது வெங்கட் ஒண்ணாப்பு தேர்வு எழுதி இருக்கிறாரா? தேர்வெல்லாம் எழுதுற அளவுக்கு டெவலப் ஆகிட்டாரா? யார் கொடுத்த தைரியம் இது? என்ன நடக்குது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது........ வெங்கட் இத்தனை சாதனை செஞ்சிருக்காரு டாகுடர் பட்டம் கொடுக்காம ஒண்ணாப்பு தேர்வெழுத வெச்சிருக்கீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////4.ஏரியில் மீன் பிடித்து குமரிகளிடம் கொடுத்து, பனைமரத்தடியில் பிரியாணி தின்பது...//////

அவ்ளோதானா....ச்சே.. நானும் வெங்கட்கிட்ட நிறைய எதிர்பார்த்தேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////10.பூஜ்யத்தில் ஒன்னு போகுமா என்ற கேள்விக்கு வாய்க்குள் பன்னு போகும்போது பூஜ்யத்தில் ஒன்னு போகாதா என்று பதில் கேள்வி சொன்னது/////

அனேகமா அடுத்த வருசம் யுனிவர்சிட்டி ஆஃப் டுபாக்கூர்ல இந்த ஒரு பதிலுக்காகவே வெங்கட்டுக்கு டாகுடர் பட்டம் கொடுப்பாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடர் வெங்கட் வால்க...... டாகுடர் டாகுடர், அடுத்து நீங்க நமீதாவ வெச்சி ஜொள்ளாயுதம்னு ஒரு படம் பண்ணுங்க டாகுடர்.......

வெங்கட் said...

அடடடா... நிம்மதியா ஒரு 2nd Show
சினிமாவுக்கு போயிட்டு வர்றதுக்கில்ல..
அதுக்குள்ள இழுத்து வெச்சு கும்மி
இருக்காங்க..

வெங்கட் said...

// 15 கருத்துரைகள்: //

ஆமா நைட் 12 மணிக்கு போட்ட
போஸ்ட்டுக்கு அதுக்குள்ள எப்படி
இத்தனை கமெண்ட்ஸ்..? நம்ம
கும்மறதுன்னா எல்லாம் நைட் டூயூட்டி
பார்ப்பாங்க போல..!!

வெளங்காதவன்™ said...

//வெங்கட் சொன்னது…

// 15 கருத்துரைகள்: //

ஆமா நைட் 12 மணிக்கு போட்ட
போஸ்ட்டுக்கு அதுக்குள்ள எப்படி
இத்தனை கமெண்ட்ஸ்..? நம்ம
கும்மறதுன்னா எல்லாம் நைட் டூயூட்டி
பார்ப்பாங்க போல..!!
///

அது... அது....

சரி சரி... ஒன்னாப்பு எப்போ பாஸ் பண்ணுவீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் பாஸ் ஆகிட்டாரா? boss aakittaraa?

சி.பி.செந்தில்குமார் said...

>>வெங்கட் சொன்னது…

அடடடா... நிம்மதியா ஒரு 2nd Show
சினிமாவுக்கு போயிட்டு வர்றதுக்கில்ல..
அதுக்குள்ள இழுத்து வெச்சு கும்மி
இருக்காங்க..

சில நாட்களுக்கு முன்பு ஒரு மானஸ்தர் செகண்ட் ஷோ சினிமா பார்க்கற பழக்கமே எனக்கு இல்லைன்னு சொன்னாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் சொன்னது…
>>வெங்கட் சொன்னது…

அடடடா... நிம்மதியா ஒரு 2nd Show
சினிமாவுக்கு போயிட்டு வர்றதுக்கில்ல..
அதுக்குள்ள இழுத்து வெச்சு கும்மி
இருக்காங்க..

சில நாட்களுக்கு முன்பு ஒரு மானஸ்தர் செகண்ட் ஷோ சினிமா பார்க்கற பழக்கமே எனக்கு இல்லைன்னு சொன்னாரே?////////

அது நல்ல படத்துக்கு அப்படிச் சொல்லி இருப்பாரு, இப்போ பாத்தது கில்மா படமாச்சே?

SURYAJEEVA said...

மண்ணெண்ணெய் ஸ்டவ் அப்படின்னாலே அலறும் மக்கள் நம்மாளுங்க, இப்ப மைக்ரோ வேவ் ஓவன் சேர்த்தாச்சா?

rajamelaiyur said...

அடுத்த வருடம் பாஸ் பண்ணிடுவார் விடுங்க

rajamelaiyur said...

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

Unknown said...

@suryajeeva சொன்னது…
\\மண்ணெண்ணெய் ஸ்டவ் அப்படின்னாலே அலறும் மக்கள் நம்மாளுங்க, இப்ப மைக்ரோ வேவ் ஓவன் சேர்த்தாச்சா?\\

ஆமா, கண்டிப்பா சார். நம்மூர்ல இப்ப மைக்ரோஓவன்ல சமைப்பதினால் உள்ள ஆபத்து யாருக்கும் தெரியாமலேயே உள்ளது...அது எப்படி உணவை சூடாக்கிறது அதனால் உணவின் கட்டமைப்பு எப்படி மாறுபாடு அடைகிற்து..அப்படி கட்டமைப்பு மாறுபட்ட உணவை உண்பதால் எனன தீங்கு ஏற்படுகிறது..அனைத்தும் இந்த லிங்கில் தெளிவாக பகிரப்பட்டுள்ளது.மேலும்
மைக்ரோவேவ் ஓவன்ல சமைக்கிற உணவுப்பொருள்களோட மூலக்கூறு கட்டமைப்பு மாற்றமடைவதால் அது நம் உடலுக்கு கேன்சர் போன்ற கொடிய நோய் உருவாவதற்கு வழிவகை செய்கிறது..அதனால் ரஷ்யா போன்ற நாடுகளில் அதனை தடைசெய்திருப்பதாக இந்த தகவல் சொல்கிறது...மேலும் ஒரு பெண்ணுக்கு சாதாரண அறுவைசிகச்சைக்கு பயன்படுத்திய இரத்தம் மைக்ரோ வேவ் அவனில் சூடேற்றப்பட்டதால் இரத்தத்தின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு அதுவே அவளுடைய மரணத்திற்கும் காரணமாயிற்று என்ற தகவலையும் இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது...

விஸ்வநாத் said...

'ஏமரா மன்னன்'
என்பதில்
எழுத்துப் பிழை;
'ஏமரா' இல்லை அது,
'ஏமாறா'
என்பதே சரி;

Unknown said...

@ViswanathV
http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post.html
இங்க பாத்திங்கன்னா எழுத்துபிழைகான காரணம் தெரியும் சார்...
ஆனா இந்த மன்னன் ரொம்ப ஏமாறுவான் சார்...